Saturday, October 31, 2015

அறம் செய்பவர் அந்தணர்! பிராணாயாமம் செய்பவர் பிராமணர்!


சக தோழமைகளுக்கு வணக்கம்!


அறம் செய்பவர் அந்தணர்! பிராணாயாமம் செய்பவர் பிராமணர்! ஒருவருடைய அல்லது ஒருத்தியினுடைய செயல் அதாவது நடத்தைதான் அவர்களை நமக்கு இன்னார் என்று அடையாளப்படுத்தி காட்டுகிறது! பொதுவா நாம் எந்த சாதியில் பிறந்தோம் என்பது முக்கியமல்ல! என்ன நாம் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்!  

எண்ணம் சொல் செயல் இம்மூன்றும்தான் நம்முடைய சாதியை தீர்மானிக்கின்றது! சுதந்திரம் நமது பிறப்புரிமை என்பதுபோல் எண்ணுவதும் சொல்லுவதும் செய்வதும் அவரவர் பிறப்புரிமையே! சமதர்மம் வேண்டுமென்றால் தாழ்வு மனப்பான்மையை வஞ்சகமாக விதைக்கும் கயவரை இனங்கண்டு களை எடுக்க வேண்டும்!

உள்ளுவதெல்லாம் உயர்வாக இருக்க வேண்டும்! உள்ளத்தில் உறுதி இருக்குமானால் உங்களை யாரால் தாழ்த்த முடியும்? 

எண்ணத்தை பார்ப்பவன் பார்ப்பான்! எண்ணத்தை திறம்பட செய்து முடிப்பவன் சத்திரியன்! எண்ணத்தை கையாள்பவன் வைசியன்! எண்ணத்தை எதிர்கொள்ள முடியாமல் எண்ணத்தின் பின் அலைபவன் சூத்திரன்! இப்பொழுது புரிகிறதா எண்ணம்தான் நம்முடைய சாதியை தீர்மானிக்கின்றது!

உதாரணமாக தீய எண்ணம் உங்களுக்குள் வருமாயின் அந்த எண்ணத்திற்கு உடன்பட்டால் முதலில் பாதிக்கப்போவது மனம், பிறகு உங்கள் வாக்கு, அதாவது சொற்களை பாதிக்கும், பிறகு உங்கள் நடத்தை அதாவது செயலையும் பாதிக்கும்! இப்பொழுதுதான் நீங்கள் அவப்பெயருக்கு ஆளாகின்றீர்கள்! 

இப்படி கீழான எண்ணங்களை கைகொள்பவர் கீழ்சாதிக்காரர்கள் மேலான எண்ணங்களை கையாள்பவர்மேல்சாதிக்காரர் என்றால் அது மிகையாகாது! 

யாம் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால் மேலே வானம்.... கீழே பூமி..... உங்களை தாழ்த்த யாரால் முடியும்? எண்ணம் சொல் செயல் இம்மூன்றும் சரியாக இருக்குமாயின் அதன் விளைவுகளும் சரியாக இருக்கும்! என்பது எம்முடைய தாழ்மையான கருத்து!


நன்றி வணக்கம்! 
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!




Friday, October 30, 2015

தமிழ்நாட்டை தமிழர்களால் ஒருபோதும் ஆளமுடியாது!



தமிழ்நாட்டை தமிழர்களால் ஒருபோதும் ஆளமுடியாது! காரணம் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்பதற்க்காக யாம் மேற்படி கூறவில்லை ! தமிழர்களுக்கு இது ஒரு பொல்லாத காலம் என்றே சொல்ல வேண்டும்!

தமிழர்நாடு தமிழர்வசம் இருந்தால் காலம் நம்கையில் என்று பெருமிதம் கொள்ளலாம்..... ஆனால் காலத்தின் சாபமோ என்னவோ தமிழகத்தை ஆள்பவர்கள் தமிழரல்லாத மாற்று மொழி இனத்தவர்களே என்றால் அது மிகையாகாது ! 

மாற்று இனத்தவரின் சூழ்ச்சிகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு தமிழர்களுக்கு அறிவு இல்லை என்றே சொல்ல வேண்டும்! காரணம் அந்த அளவிற்கு ஆதிதமிழர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது? அந்த அளவிற்கு தங்கள் மூளையை பயன்படுத்தும் மாற்று இனத்தவரின் ஒற்றுமை மெய்சிலிர்க்க செய்கிறது! இன்னொன்றும் கூற கடமைப் பட்டுள்ளோம் அதாவது தமிழ்நாட்டை தமிழர்கள் ஆள வேண்டுமென்றால் தமிழர்களுக்கு சில சிறப்பு தகுதிகள் வேண்டும். 

முதல் தகுதி பொய் சொல்ல தெரிந்திருக்கவேண்டும். 
இரண்டாவது தகுதி திருட தெரிந்திருக்கவேண்டும் பின் திருடியவுடன் பதுங்கும் தகுதி! மூன்றாவது தகுதி கொலை கொள்ளை ஊழல் லஞ்சம் லாவண்யங்களை சுவடு தெரியாமல் மறைக்கும் தகுதி!

நான்காவது தகுதி விபச்சாரம் செய்ய தன்னை அர்பணிக்கும் தகுதி. ஐந்தாவது தகுதி கணக்கில் வராத பணத்தை வசூல் செய்வது அல்லது மிரட்டி பிடுங்குவது! இல்லையேல் கள்ள கறுப்பு பணத்தை விபச்சாரத்தின் மூலம் சம்பாதிக்கும் தகுதி! 

இப்படி மேற்கூறிய தகுதிகள் தமிழர்களுக்கு என்றைக்கு கிடைக்கிறதோ! அன்றைக்குத்தான் தமிழர்களால் தமிழ்நாட்டை ஆளமுடியும்!

இந்த உண்மையை அறிவுமங்கிய படித்த பெரிய பதவி வகிக்கும் தமிழர்கள் உணர்வது கடினமே! காலத்திற்கேற்றார்போல் தங்கள் தகவமைப்பை மாற்றிக்கொள்ள முடியாத தமிழர்களின் கனவுகள் ஏக்கங்கள் புலம்பல்கள் எல்லாம் வெறும் கொக்கரிப்பாகவே போய்விட்டது! தமிழர்களின் நிலையோ அந்தோ பரிதாபம்!

மேற்கூறிய தகுதிகள் தமிழர்களுக்கு ஒருங்கே அமையாது என்பதும் காலத்தின் சாபக்கேடு என்பதா? விதி என்பதா? தமிழர்களின் பலகீனம் நன்றிவுணர்ச்சி, இந்த பலவீனமே எதரிக்கு பலம் என்பதை தமிழகத்தை ஆளும் மாற்று இனத்தவர்களுக்கு நன்றாக தெரியும் ஆனால் அறிவுமங்கிய படித்த அடிமை தமிழர்களுக்கு புரியாது! 

என்னடா தமிழர்களுக்கு எதிராக எழுதுகிறோம் என்று வருத்தப்பட வேண்டாம்! ஏன் என்றால் மேற்கூறிய தகுதிகள் தமிழர்களுக்கு கிடையாது அதனால்தான் தமிழ்நாட்டை தமிழர்களால் ஆளமுடியாது என்று தலைப்பை தேர்வு செய்தோம்!

ஒருவேளை படித்த சுயமிழந்த அறிவு மங்கிய தமிழர்களுக்கு தாங்கள் எவ்வளவு பெரிய பதவி வகித்தாலும் தாம் ஒரு சுயம் இழந்த அடிமை என்கிற அறிவு வருமாயின் சாண்றோர்களின் துணையோடு வரலாற்றை அறிந்து அவர்களின் வழி வந்தால் தமிழர்களுக்கு விடிவு காலம் எனலாம் இல்லையேல் இருண்ட காலமே!

யாம் ஏற்கனவே கூறியதுபோல் இது பொல்லாத காலம் பொய் களவு கொலை கொள்ளை விபச்சாரம் மேலோங்கி தர்மத்தை வீழ்த்தும் காலம்! ஆதலால் தமிழர்களே தர்மத்தில் நிலைத்திருங்கள் காலம் மாறும் தர்ம சக்கரம் நமக்கு துணை செய்யும் என்று கூறி விடை பெறுகிறோம்!


நன்றி வணக்கம்! 
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!

















Saturday, October 3, 2015

காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ப்பது கழிவு நீரா? சாயக்கழிவா?



               காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ப்பது கழிவு நீரா? சாயக்கழிவா? என்னடா பட்டிமன்ற தலைப்பு மாதிரி இருக்கே என்று நீங்கள் யோசிப்பது எமக்கு புரிகிறது! வாதம் புரிந்தாலும் வழிகிட்டாது! கடிதம் வரைந்தாலும் வழிகிட்டாது! என்பதை யாம் அறிவோம்! அதாவது காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ப்பது சாயக்கழிவும் கழிவுநீரும் இரண்டுமே என்றால் அது மிகையாகாது! 

              சரி இந்த புனித நீரால் ஏற்படும் நன்மைகள் என்ன ? இந்த புனித நீர் எந்த ஏரியில் கலக்கிறது என்பது குறித்து பார்ப்போம்!

              காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு  திருக்காளிமேடு வழியாக பயணித்து   நத்தப்பேட்டை எனும் விவசாய ஏரிப்பாசன நீரில் கலக்கிறது! அந்த ஏரி நிறைந்து நாசமாகி அந்த புனித நீரால் விவசாயம் கெட்டு கலியனூர் மண்ணும் கெட்டு கடைசியில் மடைமாற்றம் செய்யப்பட்டு எங்கள் பூசிவாக்கம் கிராமத்துக்கு சொந்தமான ஏரியில் வந்து அந்த புனித நீர் கலக்கிறது! 

              ஏற்கனவே ஐயம்பேட்டை, முத்தியால்பேட்டை சாயக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட எங்கள் ஏரிநீரும் மண்ணும் மாறுவதற்கே பலநூறு வருடம் பிடிக்கும். இந்த தருவாயில் மீண்டும் தற்பொழுது காஞ்சிபுரத்திலிருந்து வரும் இந்த கழிவுநீரால் இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ  மண்ணின் நிறம் மாறுவதற்கு? யாரரிவார்? 

              எங்க ஊர் மண்ணோ  முக்கால்வாசி கெட்டுவிட்டது இதை யார் ஈடு செய்ய போகிறார்கள் ? 

              எங்க ஊர் ஏரியும் சாயக்கழிவால் நிறைந்து நாசமானது போதாமல் அடுத்து பலியாக போவது ஊத்துக்காடு ஏரி என்றால் அது மிகையாகாது! காஞ்சிபுரத்திலிருந்து வருவது கழிவு நீரோ..... சாயக்கழிவோ.....

பாழாய் போனதே விளைநிலங்கள்! 
பாழாய் போனதே எங்கள் ஊரின் சுற்றுப்புற சூழல்! 
பாழாய் போனதே நிலத்தடி நீர்! 


              கேட்பதற்கு நாதியில்லை! பதில் சொல்ல யாருமில்லை!
என்பதை யாமறிவோம்! இருப்பினும் இப்பொழுது இதை யாம் பதிவு செய்யாவிட்டால் வருங்கால சமுதாயம் எம்மை கேள்விகேட்குமே என்பதற்காகவும் சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து மண்வளத்தை காப்பார்கள் என்கிற நம்பிக்கையில் யாம் இங்கே பதிவு செய்கிறோம்! 

               இனி வருங்காலத்தில் எங்க ஊரில் விவசாயம் செய்ய முடியாது இது திண்ணம்! எப்பொழுது விவசாயத்தை புறக்கணிக்கின்றோமோ அப்பொழுதே அழிவு ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்!                     

               நிமிர்ந்து நில்!
              துணிந்து கேள்! 
              ரெளத்திரம் பழகு! 
     
              என்கிற வரிகளின் அர்த்தம் எப்பொழுது எங்க ஊர் இளைஞர்களுக்கு புரியப்போகிறதோ? யாம் அறியோம் பராபரமே! 

             இறைவா இந்த கழிவுநீரால் நாசமாகும் எங்கள் மண்ணை காப்பாற்ற வழிகாட்டு! மனிதனுக்கு மனுப்போட்டா நடவாது என்பதற்காகவே! இறைவனிடம் இந்த விண்ணப்பத்தை சமர்பிக்கிறோம்! 

மண்ணின்றி விவசாயமில்லை! 
விவசாயமின்றி அரசுமில்லை! 
கவனத்தில் கொள்வோமாக! 

நன்றி வணக்கம்! 
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!