Friday, September 25, 2015

மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு...




பெறுநர்: 

                மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள், 
                புது தில்லி-110001 
                WWW.narendramodi.in www.facebook.com/narendramodi             
                www.twitter.com/narendramodi 


                மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு, 
பூசிவாக்கம் கிராம பொதுமக்களின் பணிவான வணக்கங்கள்! தங்களுடைய நலனை காக்க எல்லாம் வல்ல இயற்கை அன்னை துணை நிற்பாள் என்று பரிபூரணமாக நம்புகிறோம்! 

               ஐயா இந்த கடிதத்தின் மையநோக்கம் என்னவென்றால் எங்கள் கிராமத்தின் வழியாக பயணிக்கும் காஞ்சிபுரம் சென்னை செல்லும் ரயில்கள் எங்கள் ஊரில் நின்று செல்ல ஏதுவாக ஒரு இரயில்வே நிலையம் அமைக்க வேண்டிதான் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறோம் என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறோம் ஐயா! 

                எங்கள் ஊரில் இரயில் நிலையம் அமையுமானால் அருகிலுள்ள நெய்க்குப்பம், கிதிரிப்பேட்டை, புத்தகரம், பாவாசாகிப்பேட்டை, திம்மராஜாம்பேட்டை, புதுப்பேட்டை, ஏகனாம்பேட்டை, நாயகன்பேட்டை, தாங்கி, வில்லிவலம், கிராமவாழ் பயணிகளுக்கு சென்னைக்கும் இந்தியாவின் பிறபகுதிகளுக்கும் பயணிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மிகவும் பணிவன்புடன் சுட்டிக்காட்டுகிறோம் ஐயா! 

               மேற்கூறிய கிராம பொதுமக்களின் சார்பாகவும் எங்கள் ஊர் சார்பாகவும் இந்த கடிதத்தை விண்ணப்பமாக ஏற்று இந்திய ரயில்வே துறைக்கு தங்களுடைய பரிந்துரையின் கண் எங்கள் ஊருக்கு இரயில் நிலையம் ஒன்றை அமைத்து பயணிகளின் சிரமத்தை குறைப்பீர்கள் என்று நம்பியே இந்தக்கடிதத்தை தங்களின் திருப்பார்வைக்கு அனுப்பிவைக்கிறோம்! 

வாழ்க பாரதம்! 
வாழ்க தேசியம்! 
வாழ்க தமிழகம்! 
வாழ்க தமிழர்கள்! 

இப்படிக்கு......
                                                                                                                                                                    பூசிவாக்கம் கிராமபொதுமக்கள்! 
எண்.82,பூசிவாக்கம், 
ஏகனாம்பேட்டை அஞ்சல், 
காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு. 
இந்தியா. 
தபால் பெட்டி எண்:631601

Thursday, September 24, 2015

விவசாயத்தை புறக்கணித்துவிட்டு எந்த ஒரு நாடும் வல்லரசு ஆகமுடியாது!

              



                  விவசாயத்தை புறக்கணித்துவிட்டு எந்த ஒரு நாடும் வல்லரசு ஆகமுடியாது! எப்பொழுது விவசாயிகள் மதிக்கப்படுகிறார்களோ அன்றைக்கே அந்த நாடும் மதிக்கப்படும்! விவசாயிகளை புறந்தள்ளிவிட்டு மற்றதுறைகளை வருமானத்திற்காக விருது கொடுத்து வளர்த்தாலும் வீழ்ச்சியே விளையும்! 

                 யார் நம்முடைய வயிற்றுக்காக   உழைக்கிறார்களோ   அவர்களுக்கு  பாதுகாப்பு கொடுங்கள்! சிறப்பு அடையாள அட்டை கொடுங்கள்! மிகப்பெரிய விருது கொடுங்கள்! வட்டியில்லா கடன் கொடுங்கள்! குறைந்தபட்சம் ஊர்புறங்களுக்கு வந்து ஊக்கமாவது கொடுங்கள்! முதலில் விவசாயிகளுக்கு மரியாதை கொடுங்கள்!  
மற்ற எல்லா துறையும் தானாக வளரும்!

                  மண்ணுக்குண்டானவர்களை மதிக்க தவறினால்..... விரைவில் அந்த நாடு அழியும்! மண்ணையும் மக்களையும் காக்கமுடியாத பட்சத்தில் விபச்சாரம் பெருகும், கலகநாசம் உண்டாகும், மதுவும் மாதும் மக்களை ஆட்சி செய்யும், அரசு அழியும்! வறுமை வாட்டும்! கள்ளப்பணம் பெருகும்! கறுப்பு பணம் கைமாறும்! மந்திர தந்திரங்கள் வலுபெரும்! ஆத்மீகம் அரசியல் அறம் தவறி நாசமடையும்! பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் இருப்பார்கள்! ஆதலால் ஒரு அரசாங்கம் எப்பாடுபட்டாவது விவசாயிகளை காக்கவேண்டும் என்பதுதான் எம்முடைய பணிவான வேண்டுதல்!

                     டாக்டருக்கு அரசாங்க ஊழியருக்கு, தனியார் துறை ஊழியருக்கு, பெண்தருகிறார்கள்! விவசாயம் செய்பவருக்கு பெண் கொடுக்க மறுக்கும் ஒரு கேவலமான நிலைமையை யாம் உணர்கிறோம்! குறிப்பா சொல்லப்போனால் பெண்கள் இல்லாமல் விவசாயத்தை நினைத்துகூட பார்க்க முடியாது எனலாம்! ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழே மாறிவருகிறது! இப்பொழுதெல்லாம் கிராமத்து பெண்களை ஏற்றிச்செல்ல கம்பெனி வேன்கள் ஊருக்குள் வருவதை முன்னேற்றமாகப் பார்ப்பதா வருங்காலத்தில் வர இருக்கம் ஆபத்தாக பார்ப்பதா என்று எம்மால் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை! 

                    பெண்கள் விவசாயத்தை மறப்பார்களானால் பேரழிவு நிச்சையம்! இந்த நிலை நீடித்தால் மண்ணெல்லாம் பொன்னாகாது, பிளாட்டாகும்! என்று கூறி விடைபெறுகிறோம்! கூடுமானவரை மண்ணையும் உழைக்கும் மக்களையும் காப்பாற்றுவோம்!

வானின்றி நீரில்லை!

நீரின்றி உலகமில்லை! 

மண்ணின்றி விவசாயமில்லை! 

விவசாயமின்றி அரசுமில்லை! 

கவனத்தில் கொள்வோமாக! 

நன்றி வணக்கம்! 
இப்படிக்கு 

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!


Tuesday, September 22, 2015

வணக்கம் பண்பலைக்கு ஓர் கடிதம்!

     


                வணக்கம் பண்பலைக்கு வணக்கம்! கடந்த நான்கைந்து நாட்களாக இணையத்தின் ஊடாக வணக்கம் பண்பலை கேட்க நேர்ந்தது! ஒரிரு நிகழ்ச்சிகள் மட்டுமே கேட்க முடிந்தது! 

                அந்த வகையில் தூங்க நகரம் நிகழ்ச்சி மட்டுமே எங்களுக்கு பகலில் கேட்ககூடிய நிகழ்ச்சி! மற்ற நிகழ்ச்சிகள் ஒரு சில நிமிடம்தான் எம்மால் கேட்க முடியும்!

               தமிழ்நாட்டில் தமிழ் பண்பலைகளுக்கு பஞ்சமே இல்லை எனலாம்! இருப்பினும் கடல்கடந்து கேட்கும்போது ஏதோவொன்று எம்மை ஈர்க்கவே செய்கிறது! கேட்க இனிமையாக இருக்கிறது!

               பொதுவா கேட்பவருக்கு விருப்பம் இல்லையென்றால் எவ்வளவு நுட்பமான இசையென்றாலும் இரைச்சலாகத்தான் கேட்கும்! தொகுப்பாளர்கள் முழு ஈடுபாடுடன் தொகுத்தளிக்கும் நிகழ்ச்சி அனைவராலும் விரும்பப்படும்! 

               இயந்திரத்தனமான தொகுப்பாளர் ஒரு கூலி ஆள்மட்டுமே! இயல்பான ஒரு தொகுப்பாளர் எந்தப்பாடலை ஒலிபரப்பினாலும் இனிமையே!

               வணக்கம் பண்பலையில் பணியாற்றும் அனைவருக்கும் வணக்கம் கூறி விடைபெறுகிறேன்!

பெருமை கொள் தமிழா!

வாசகம் உற்சாகம்!

 அருமை!

நன்றி வணக்கம்!

இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 




Monday, September 21, 2015

ஆழம் பார்த்தவன் கடலை ஆள்கிறான்! கரைகண்டவன் கடவுளாகிறான்!



              ஆரம்பத்தில் அவன் கடலைக்கண்டு அஞ்சினான்! இந்த பூமியைவிட பரப்பளவில் பெரியது என்பதால்! சரி கடலில் இறங்கித்தான் பார்க்கலாம் என்றால் ஆழத்தை கண்டு அஞ்சினான்! 

             சரி கடலை கடந்துவிடலாம் என்று அவன் நினைத்தபோது வானத்தை தொட்டு காட்சியளிக்கும் கடலை பார்த்ததும் ஆகா நாம கரையேரவே முடியாது என்று முடிவு செய்துவிட்டான்! 

              இப்படி பயந்து கொண்டிருந்த அவன் ஒரு நாள் சிந்திக்க துவங்கினான்! இந்த பூமியைவிட பரப்பளவில் கடல் பெரியதாக இருந்தாலும் அந்த கடலை சுமப்பது இந்த பூமி என்பதை உணர்ந்து கொண்டான்!

             கடலின் ஆழத்திற்க்கும் ஒரு எல்லை உண்டு என்பதை புரிந்து கொண்டான்! கடல் கடந்தான் கரைக்கண்டான் கரையேறினான்! 

             இந்த கடலின் அனைத்து குணங்களையும் கொண்டவள்தான் பெண் என்பதையும் அவன் புரிந்து கொண்டான்! பயந்தவனை பெண் என்கிற கடல் மெல்ல கொன்றுவிடுகிறது! 

            துணிந்தவனை எதிர்நீச்சல் தெரிந்தவனை பெண் என்னும் கடல் மெல்ல அவனை கரை சேர்த்துவிடுகிறது! 

            ஆழம் பார்த்தவன் கடலை ஆள்கிறான்! கரைகண்டவன் கடவுளாகிறான்!


நன்றி வணக்கம்!

இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 


முகமது நம்மை ஆள்கின்றது!


             
              எது நம்மை ஆள்கின்றது? முகமது நம்மை ஆள்கின்றது! முகமது எப்படி நம்மை ஆளமுடியும்? முகம்+அது= முகமது இங்கு முகம் என்றால் அறிவு! அது என்றால் எதையாவது சுட்டுவது! அதாவது அறிவை சுட்டிக் காண்பிப்பது முகமாகும்! அந்த அறிவின் இருப்பிடம் சிரசாகும்! அந்த சிரசாகும் நம்மை ஆள்வது!

               ஈஸ்வரன் என்ற சொல் ஏதோ இந்து மதத்துக்காரர்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல என்று மாற்று மதத்துக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

               ஞானம் பெறுவது சுலபம்! ஞான அனுபவம் கிடைப்பது கடினம்! ஞான அனுபவம் வேண்டுமென்றால் பகிரதப் பிரயத்தனம் ஒவ்வொருத்தரும் செய்தே ஆகவேண்டும்! உழைக்காமல் எதுவும் கிட்டாது, அப்படி கிட்டினால் அது நிலைக்காது! கடன்பெற்ற ஞானம் வழிகாட்டும், ஆபத்திற்கு உதவாது! ஞான அனுபவம் கொடுக்காது! 

               ஈசனோடு இருப்பினும் ஊழ் நம்மை விடுவதில்லை! பக்தியும் பணிவும் பக்குவம் தரும்! எல்லோரும் ஞான அனுபூதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்!

நன்றி வணக்கம்!
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 




இதோ இயேசு நம் மூச்சாகிவிட்டார்!

               



               இதோ இயேசு நம் மூச்சாகிவிட்டார்! அவர் தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!இனி ஒருபோதும் இயேசுவால் வரமுடியாது!காரணம் அவர் சர்வ ஜீவிகளின் கர்த்தாவிடம் கலந்துவிட்டதால்!

               இயேசுவை காண வேண்டும் என்றால் மனம் திரும்புங்கள் அதாவது உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்! யார் தன்னுடைய சுவாசத்தை கவனிக்கின்றானோ அவனே விசுவாசி! எவன் தன்னுடைய மனத்தை உலகப்பிரகாரமாக செலுத்துகிறானோ அவனே அவிசுவாசி!


               மொத்தத்தில் இயேசுதான் நம் மூச்சு என்பதை புரிந்து கொண்டால் ஆவி! ஆத்மா! சரீரம்! எதுவென்று புரியும்!

              சாத்தான் என்பது நம்முடைய மனத்தின் மறுபக்கம் அதாவது துர்குணமாகும்! சிலுவை நம்முடைய உடலாகும்! சிலுவைப்பாடு என்பது காம, குரோத, மோக, லோப, மத, விரோத, டம்ப, பொறாமை! இவைகளால் ஏற்படக்கூடிய இன்ப துன்பங்களாகும்! 

              இயேசு வருவார்! இயேசு வருவார்! என்று சொன்னால் தற்பொழுது நம்மை ஆள்வது யார் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? ஆக ஆண்டது! ஆள்வது! ஆளப்போவது! எது என்றால் நம்மில் நம்முள் சகவுயிர்களுக்கும் உயிராய் உள்ள நித்திய ஜீவனே என்பதை புரிந்து கொள்வோம்!

             இயேசுவின் இரத்தம் என்பது நம்மூடலில் ஓடுகிற இரத்தமாகும் அதுவே சக்தி ஆம் பராசக்தி!


நன்றி வணக்கம்!
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 



யார் பிரமச்சாரி?

                எல்லா உயிர்களும்! எல்லா அண்டங்களும்! பிரம்மத்தை சார்ந்து இருப்பதால் அனைவரும் அனைத்தும் பிரம்மச்சாரிகளே! அறிந்தும் அறியாமலும் நாம் அனைவரும் பிரம்மம் என்கிற இயற்கையை,வெட்டவெளியை,வெறுமையை, இறைவனை, சார்ந்து இருப்பதால் பிறப்பொக்கும் எல்லாவுயிரும் பிரம்மச்சாரிகளே! 

                பொதுவாக பிரம்மச்சாரி என்றால் சம்சார பந்தத்தை கைவிட்டவர்களை, உலக வாழ்க்கையை துறந்தவர்களை, பிரம்மச்சாரி என்று அழைப்போம்! இது தவறான கருதுகோள் எனலாம் காரணம் துறந்தவர்களையும், துய்ப்பவர்களையும், பிரம்மமே சுமப்பதால் இருசாராரும் பிரம்மச்சாரிகளே! 

                மேலும் மைதுனம் கொள்பவர்களை சம்சாரியாகவும், மைதுனம் கொள்ளாதவர்களை பிரம்மச்சாரியாகவும் பார்ப்பது நம்முடைய அறியாமையாகும்! எந்த சாமியாராக இருந்தாலும் அவருக்கும் விந்து சுரக்காமல் இருக்காது என்பதையும், எந்த பெண் சாமியாராக இருந்தாலும் அவருக்கும் கருமுட்டை வெடிக்காமல் இருக்காது என்பதையும், புரிந்து கொண்டால், மைதுனம் எவ்வுயிருக்கும் பொதுவாம் என்பதை அறிவோமானால் சாமி யார்? பிரம்மச்சாரி யார்? என்கிற கேள்விகளுக்கு விடைகிடைக்கும்! அனைவரும் அனைத்தும் பிரம்மத்தின் சாரம் என்பதும் விளங்கும்! 

நன்றி வணக்கம்!


இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 


Sunday, September 20, 2015

அகங்காரம் ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை!

அகங்காரம் ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை! 
சங்காரம் ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை! 

வியாபாரம் (மனத்தின்) ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை! 
துலாபாரம் ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை! 

மின்சாரம் ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை! 
சம்சாரம் ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை!

அரிதாரம் ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை! 
அவதாரம் ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை! 

அடிவாரம் ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை! 
ஆம் ஓங்காரம் ஓய்வதில்லை!
ஆங்காரத்தை சுமக்கும் உயிர்கள் ஓங்காரத்தை உணர்வதில்லை!

நன்றி வணக்கம்!


இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 

அறம் செய்ய மறு! ஆத்திரம் கொள்! இச்சைப்படி நட!

                அறம் செய்ய மறு! ஆத்திரம் கொள்! இச்சைப்படி நட! ஈவது கூடாது! உப்பிட்டவரை மற! ஊழல் புரி! எதிர்த்து பேசு! ஏய்க்க பழகு! ஐந்து மாபாதகம் செய்! ஒன்றுபட விடாதே! ஓதுவதை கெடு! ஔவை சொல் மீறு!!! 

               ஒரு வேளை! இப்படி சிறுவயதிலேயே நமக்கு மேற்கூறிய நீதி நெறிகள் போதிக்கப் பட்டிருந்தால் தற்பொழுது நீதிமன்ற நீதிபதிகளால் வழங்கப்படும் தீர்ப்புகள் நடுநிலையாளர்களையும், வாய்மையே வெல்லும் என்று நம்பிக் கொண்டிருப் பவர்களுக்கும், உண்மை விரும்பிகளுக்கும் ஒரு மனநிறைவை தந்திருக்கும் என்பது எம்முடைய தாழ்மையான கருத்து.

              நமக்கு போதித்த நீதி நெறிகள் நடைமுறைக்கு பயன்படாமல் போன இந்த முரண்பாடுதான் மனிதகுலத்தின் சாபக்கேடு என்றால் அது மிகையாகாது.

             வலியது வெல்லும் என்கிறார்கள் அந்த வலியது தீயதில் என்றால் வாய்மையே தோற்றுப் போகும் என்பதுதானே பொருள்?
             ஒழுக்கமும் ஒழுக்கமின்மையும், சட்டமும் சட்டவிரோதமும் ஒன்றாகத்தான் பயணிக்கின்றன!
            இந்த பூமியில் பாவப்பட்ட பயணி மனிதன் மட்டுமே!மேற்கூறியவைகளில் சிக்கித் தவிக்கிறான்! இயற்கையின் நீதியை மாற்ற முயல்வதும் ஆள நினைப்பதும் அறியாமையே என்பது காலம் போகப்போக நமக்குணர்த்தும் உண்மை! 
             எதையும் பணத்தால் சாதிக்க முடியும் என்றால் உலகம் இன்றைக்கு அமைதிப் பூங்காவாக ஆனந்ததின் எல்லையாக அல்லவா மாறியிருக்க வேண்டும்? ஏன் மாறவில்லை?
நன்றி வணக்கம்!
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 

மூத்திரத்தை குடிநீராக குடிக்க முயல்வீர்கள் இல்லையா?

             குடிப்பதற்கு தண்ணீரே இல்லாத தேசத்தில் நீங்கள் உங்கள் தண்ணீர் தாகத்தை தணித்துக்கொள்ள கடைசி ஆயுதமாக உங்களுடைய மூத்திரத்தை குடிநீராக குடிக்க முயல்வீர்கள் இல்லையா?


              அதுபோலத்தான் இந்த உலகத்தில் நீங்கள் உண்பதற்கு ஏதுவாக காய்களும், கனிகளும், விதைகளும், மரங்களும், தாவரங்களும் படைக்கப்பட்டு இருக்கின்றன! 


               மேற்கூறிய பச்சைத்தாவரங்கள் தானியங்கள் அனைத்தும் சுமார் 12 வருடங்கள் மழையின்மையின் காரணமாக அழிந்து போகுமாயின் அப்பொழுது நீங்கள் உங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள இன்னொரு உயிரை கொன்று புசிப்பீர்கள் அல்லவா? அங்குதான் இறைவனுடைய இரைதர்மம் மாறுபடுகிறது! 

               ஆனால் எல்லாம் வல்ல இறைவனோ (இயற்கையோ) இப்பொழுது மேற்கூறிய பச்சைக்காய்கறிகள் அனைத்தும் நமக்கு வழங்கி வாழவைத்துக்கொண்டிருக்கிறது இல்லையா? இந்த சமையத்தில் மற்றொரு உயிரை கொல்ல முயல்வதும் அதனை சமைத்து உண்பதும் சத்தியத்திற்கு நேர்ரெதிராக அல்லவா உள்ளது? 


               எந்த மகான்களும் அவசியமின்றி அசைவத்தை போதித்திருக்க மாட்டார்கள்!

               இதைத்தான் புலால் மறுத்தானை இந்த உலகத்துயிர்கள் கைகூப்பித் தொழும் என்று பொதுமறை நமக்கு போதிக்கின்றதே இந்த அறத்தை உங்களால் மறுக்க முடியுமா?


               இறையருளால் பூமியில் நம் எல்லோருக்கும் எல்லாம் உள்ளதை மறந்துவிடாதீர்கள்! 


               இனி உங்கள் விருப்பம்.... உயிர்பலியிடுவதும் அல்லது உயிர்களை காப்பாற்றுவதும்...... காரணம் நீங்கள் எதை விதைப்பீர்களோ அதையே அறுப்பீர்கள்! 

தீதும் நன்றும் பிறர்தர வாரா!

நன்றி வணக்கம்!


இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 





ஓம் என்ற சப்தம் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது!



                  ஓம் என்ற சப்தம் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது! அந்த சப்தம் வெளியில் இல்லை, உள்ளே! என்று கவனித்தவர்கள் தியானிக்க முயல்கிறார்கள் கவனிக்க முடியாதவர்கள் பாவம் போர் அடிக்கிறது என்கிறார்கள்!

                   தவம் பழகினால் நான் என்கிற செருக்கு குறைவதை உணரலாம்! அப்படி பழகிக்கொண்டே வரும்போது எங்கே இந்த பூமியில் அடையாளம் இல்லாமல் போய்விடுமோ என்று பயந்து நம்முடைய நான் மிகுந்த வேதனைக்குள்ளாகிறது! ஆனால் ஒரு தவசி தன்னுடைய அகங்காரத்தின் புலம்பலை மனம் சித்தம் புத்தியைக்கொண்டு சிகிச்சை அளித்து சமாதானத்திற்கு ஏற்பாடு செய்கிறார்! 

                  பாவம் தவமே கைகூடாதவர்களுக்கு தன்னுடைய நான் வழிப்பட்டு மனம் சித்தம் புத்தியை துலைத்துவிடுவார்கள்! இதுதான் தவசீலர்களுக்கும் பாமரர்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு! மனமே அனைத்திற்கும் காரணமாகவும் காரியமாகவும் இருக்கிறது!

                     இறைவன் மின்சாரம்! என்றால் இறைவி! மின்சாரத்தை கடத்தும் கம்பி எனலாம்! நம்முடைய மனமே மின்சாரத்தை பாதுகாப்பதும் செலவழிப்பதும் அதற்கான கருவிதான் மெய் வாய் கண் செவி மூக்கு இது பிறப்பொக்கும் எல்லாவுயிருக்கும் பொருந்தும்!

                     இந்த உண்மையை தனக்குள்ளே கடந்து பார்க்கவே கட+ உள் என்றார்கள்! ஏன் கட வுள் என்று சொல்லவேண்டும் இறைவன் உயிராக அதாவது மின்சாராமாக அனைத்து உயிர்களுக்கும் உயிராக இருக்கிறான் என்பதை அறிந்துகொள்ளவே கட வுள் என்ற வினைச் சொல்லை பயன்படுத்தினார்கள்! அப்படி தவம் செய்து அந்த மின்சாரத்தை புரிந்து கொண்டவர்கள் எவ்வுயிரும் தம்முயிரே என்பதை உணர்ந்து கொண்டார்கள்!

                   உணராதவர்கள் இறைவனை தேடியே மாண்டு போனார்கள் என்பதுதான் உண்மை!


நன்றி வணக்கம்!

 இப்படிக்கு!
 பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 

அசைவம் ஆபத்து! கொலை செய்யப்பட்ட பிணத்தை உண்ணக்கூடாது!

                 எரியும் விறகை பிடுங்கிவிட்டால் கொதிக்கின்ற உலை நின்றுவிடும்! அதுபோல் நம்முடைய எண்ணம்! சொல்! செயல்! சரியாக இருந்தால்தான் எதையும் சரியாக செய்ய முடியும்! 

                 எண்ணம் தவறாகிப்போனால் சொற்கள் தவறாகிவிடும்! சொற்கள் தவறாகினால் ஒருவன்/ஒருத்தியின் செயல் அல்லது நடத்தை தவறாகிவிடும்! நடத்தை கெட்டவன் அல்லது நடத்தை கெட்டவள், இந்த இருவராலும் நற்காரியங்களை தனக்கோ தன்னுடைய குடும்பத்திற்கோ அல்லது ஊருக்கோ உலகத்திற்கோ ஒருபோதும் நன்மை செய்ய முடியாது!

                 காரணம் மேற்கூறியதுபோல எண்ணமும் சொல்லும் நடத்தையும் தவறாகிப்போனதின் விளைவேயாகும்! சரி இனி இந்த எண்ணம், சொல், செயல் இம்மூன்றையும் சரியாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்? 

                 ஒரே வழி சைவம்தான்! அசைவம் ஆபத்து! உயிர்கொலை செய்ய கூடாது! பிறகு கொலை செய்யப்பட்ட பிணத்தை உண்ணக்கூடாது! தேவையில்லாத மாமிசங்களை உண்பதால் தேவையில்லாத உணர்ச்சிகளை தூண்டி நம்முடைய சிந்திக்கும் திறனை அழித்துவிடும்! 

                 கொலை செய்யலாம்..... எப்பொழுது என்றால் நம் உயிருக்கே ஆபத்து நேரும்போது! மற்றபடி நம்முடைய உணவை மாற்றிவிட்டால் குணத்தை மாற்றிவிடலாம்! 

முட்டை சாப்பிட்டால் புத்தி வேலை செய்யாது!

 மாடு சாப்பிட்டால் மனம் வேலை செய்யாது!

 ஆடு சாப்பிட்டால் அடிமைத்தனம் பெருகும்! 

கோழி சாப்பிட்டால் சூடு உற்பத்தியாகி சேவல் சண்டை ஓயாது என்பதுபோல் நாமும் சண்டையிட்டு சாகவேண்டியதுதான்!

                   மொத்தத்தில் சைவ உணவே! எண்ணம்! சொல்! செயல்! இவைகளை சரியாக வைத்திருக்கும் என்பது எம்முடைய தாழ்மையான கருத்து!

நன்றி வணக்கம்!

 இப்படிக்கு!
 பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 

வாழும்போதே இறப்பது எப்படி? வாழும்போதே எது இறக்கும்? எது நிலைக்கும்?

                  பிறந்தால் இறந்தே ஆகவேண்டும்! இது இயற்கையின் நியதி!
ஆனால் வாழும்போதே இறப்பது எப்படி? வாழும்போதே எது இறக்கும்? எது நிலைக்கும்? பொதுவா மரணமென்னும் லட்சியத்தை அடையவே உயிர்கள் பயணிக்கின்றது! 

                  உயிர்களின் வினைவழி அளவுக்கேற்ப ஆயுள், பாலினம், நிறம், குணம், மனம், அகங்காரம்! இவைக்கேற்ப உடல் அமைகிறது! இந்த காலளவுதான் வாழ்வாகிறது! வந்த வேலை முடிந்தவுடன் உயிர் தன்னை முடித்துக்கொள்கிறது!

                 இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று ஆனால் உயிரோடு இருக்கும்போதே பிறப்புக்கு வித்தான "நான்" என்னும் அகந்தையை மரணிக்க செய்வதே தவம்! 

                 தவசீலர்களின் அனுபவம்தான் மரணமில்லா பெருவாழ்வு! அகந்தை எனும் நீர்குமிழி உடைந்து மனமெனும் கடலில் கலப்பது நிகழ்ந்துவிட்டால் தவம் கூடிவிடும் நீங்கள் இயற்கையின் அம்சமாக மாறிவிடுவீர்கள்! 

                அகந்தையற்ற வீடு ஒரு கோயில் அதுபோல் உங்கள் தேகம் சீவன் வசிக்கும் சிவாலயமாகிவிடும் இதுவே உயிராம் சிவன் அகந்தை, மனம், இரண்டுமற்று தன்னுடைய ஆதிநிலையில் கலப்பதுதான் சமாதி! 

                இந்த நிகழ்வு தினந்தோறும் நம்வாழ்வில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர்தான் சுவாமி சிவானந்த பரமஹம்சர் இதனை அறிந்து உயிரை கசியவிடாமல் தக்கவைக்கும் உபாயத்தை உலகுக்கு அறிவித்தார்! அதற்கு பெயர்தான் சித்தவித்தை இந்த வித்தையை பயில்பவர்களுக்கு சீவன் தன் ஆதிநிலையை அடைவதற்கு சிரமமில்லாமல் சீவன் ஜீவசமாதி அடைகிறது! பயிற்சியை பெற்று செய்யாதவர்களுக்கு உயிரானது மனம் அகந்தை இவைகளில் சிக்கி சாதாரண வினைவழி சக்கர மரணம் நிகழ்கிறது!

நன்றி வணக்கம்!


 இப்படிக்கு!
 பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 


தாழ்த்தப் பட்டவர்கள் யார்?

                 தாழ்த்தப் பட்டவர்கள் என்று அனைவராலும் அழைப்பதை எம்மால் ஒருபோதும் ஏற்கமுடியாது! காரணம் என்னவென்றால் என்றைக்காவது நாம் எதில் தாழ்ந்துவிட்டோம் என்று என்றைக்காவது யோசித்திருப்பீர்களா?

                 பொதுவாக இந்த பசி, தாகம், மலம், மூத்திரம், விக்கல், தும்மல், பாலினக்கவர்ச்சி வலி, வேதனை, இன்பம் துன்பம்! போன்ற பொதுவான உணர்ச்சிகள் அனைத்தும் மனிதகுலத்திற்கே உரியதுதானே இதில் எதில் நாம் தாழ்ந்துவிட்டோம் என்று சிந்திக்க துவங்கும்போதுதான் ஒரு உண்மை புலப்பட்டது!

                அது என்னவென்றால் மனதளவில் நம்மை தாழ்த்தி பலவீனமானவர்களாக மாற்றுவதற்கே தந்திரமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்கிற தாழ்வுமனப்பான்மையை இளமையில் விதைத்துவிட்டால் உயர்ந்த எண்ணங்களும் ஒழுக்கமும் சுகமும் இவர்களுக்கு கிடைக்ககூடாது என்பதற்காகவே உளவியல் ரீதியாக தாழ்த்தப்பட்டவர்கள் என்று அழைக்கிறார்கள்!

தாழ்வு மனப்பான்மையை அகற்றுவோம்! 

ஒழுக்கத்தால் உயர்வோம்!

ஒரு நாள் நம்மை தாழ்த்தும் கயவர்களை திருந்த வகைசெய்வோம்!

நன்றி வணக்கம்!

 இப்படிக்கு!
 பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 

Thursday, September 17, 2015

பில்லி சூனியம் செய்வினை செயப்பாட்டு வினை!

                பில்லி சூனியம் செய்வினை செயப்பாட்டு வினை! மந்திரம்! தந்திரம்! எந்திரம்! வசியமருந்து! கட்டுதல்! இவைகள் எல்லாம் உண்மையா? பொய்யா?


                   மேற்கூறிய அனைத்தும் உண்மையே என்கிற கூற்றுபடி பார்க்கப்போனால் இவைகள் எல்லாம் யாருக்கு பலிக்கும் யாருக்கு பலிக்காது என்பது குறித்து பார்ப்போம்! 

                முதலில் யாருக்கு பலிக்காது என்பது குறித்து பார்ப்போம்!
 யார் ஒருவர் தன்னுடைய உடல் பொருள் ஆவியை எல்லாம் வல்ல "இயற்கையிடம் அதாவது இறைவனிடம் சரணடைந்து தன்னை ஆள்வது தான்தான் என்பதை உணர்ந்தவர்களை பஞ்சமா பாதகங்களை செய்யாதவர்களை மேற்கூறிய அனைத்தும் இவர்களை ஒன்றுமே செய்ய முடியாது" இவர்களை இறைவன் மட்டுமே சோதிக்க முடியும்! 
அடுத்து இவர்களுக்கு ஏதாவது செய்ய நினைத்தாலோ அல்லது செய்தாலோ அந்த கேடு தனக்கு என்பதை புரிந்துகொள்வார்கள்! அதாவது உத்தம புருஷர்களுக்கு உத்தமிகளுக்கு பலிக்காது! 

             சரி யாருக்கு பலிக்கும் என்பது குறித்து பார்ப்போம்! அடுத்தவர் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத பொறாமை குணம் உள்ளவர்களுக்கு மேற்கூறிய அனைத்தும் பலிக்கும்! குறுக்கு வழியில் சாதிக்க நினைப்பவர்களை பெரிதும் பாதிப்பது மேற்கூறியவைகள்தான்! இவர்களை மையமாக வைத்தே பில்லி சூனியம் வைக்க எடுக்க போன்ற நிறுவனங்கள் பெரிதும் இயங்கிவருவதை அன்றாடம் செய்திதாள்களில் வாசிக்க காண்கிறோம்!

                சரி மேலும் யாருக்கெல்லாம் பலிக்கும் என்று பார்ப்போம் திருடர்களுக்கு பலிக்கும்! கொலை கொள்ளை அடிப்பவர்களுக்கு பலிக்கும்! மச்ச மாமிசம் திண்பவர்களுக்கு பலிக்கும்! அறியாமையில் உள்ள பலவீன மனமுடையவர்களுக்கு பலிக்கும்! உடல் மனம் உயிர் தூய்மையில்லாதவர்களுக்கு பலிக்கும்! முறைதவறிய காதல் புரியும் அனைவரும் இதில் சிக்கி கொள்வார்கள் அதனால் இவர்களுக்கு பலிக்கும்! மொத்தத்தில் சுயபுத்தி இல்லாதவர்களுக்கு மேற்கூறிய அனைத்தும் பலிக்கும்!

       சரி மேற்கூறியவகள் அனைத்தும் பொய்யே என்கிற கூற்றுப்படி என்னவென்று பார்ப்போம்! 

               படித்த பட்டதாரிகள் அறிவுஜீவிகள் மேற்கூறிய அனைத்தும் மூடநம்பிக்கைகள் என்கிற ஒரே வார்த்தையில் தங்களுடைய கருத்தை முன்வைப்பார்கள்! இப்படிப்பட்டவர்கள் மனோபலமும் நான் என்கிற அகந்தையும் வாசிப்பு கர்வமும் இவர்களுக்கு பக்கபலமாக இருப்பதாலும் இரத்தத்தின் வேகம் இருக்கும்வரை மேற்கூறியவைகள் இவர்களை பாதிப்பதில்லை! இவர்கள் பார்க்க சீர்திருத்த வாதிகளைப் போல் காட்சியளிப்பார்கள்! எல்லாத் தவறுகளுக்கும் அறிவியல் காரணம் கற்பிப்பார்கள் இவர்களை வாதத்தில் வெல்ல முடியாது! இயற்கை இவர்களுக்கு தக்க பாடம் கொடுத்து ஆட்கொள்ளும் போதுதான் திருந்துவார்கள்! சரி இவர்களை மேற்கூறிய பில்லி சூனியம் எப்பொழுது பாதிக்கும் என்றால் நம்மை கேள்வி கேட்பதற்கு யாருமில்லை எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற எண்ணம் இவர்களுக்குள் நுழைந்து தீய பழக்கங்களுக்கு ஆளாகும்போது இவர்களுக்கு பலிக்கும்!
 அறிவியலை காரணம்காட்டும் இவர்கள் உடல்பலம் குறையும்போது மனோபலமும் குறையும் அப்பொழுதுதான் எல்லாம் வல்ல இயற்கையிடம் சரணடைவார்கள்! 

                  உளவியல் பயின்றவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் புறக்காரணங்களை மட்டுமே விளக்க முடியும்!                                              


 முடிபு! 

                  மொத்தத்தில் படித்தவர்களை பில்லி சூனியம் பாதிப்பதில்லை! அவர்கள் மனோபலம் குறையும்போது பயத்தினால் படித்தவர்களும் பலியாகிறார்கள்! படித்த கயவர்களும் பில்லி சூனியத்தை கையாள்வதுதான் கொடுமை! படித்த பணக்காரர்களும் தங்கள் பொல்லா வினையாலும் பேராசையினாலும் பில்லி சூனியத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்!

                   உண்மையோ! பொய்யோ! சூனியம் என்பது அவரவர் மனமே! இந்த மனமே அனைத்திற்கும் காரணமாகவும் காரியமாகவும் இருப்பதால் அந்த மனத்தை செம்மையாக வைத்துக்கொண்டால் போதும்! செய்வினை செயப்பாட்டு வினை உங்களை மீறி நிகழாது! மேலும் தன்னுடைய ஜீவசக்தியை தவறாக பயன்படுத்தும் சூனியக்காரர்களும் சூனியக்காரிகளும் இருக்கவே செய்கிறார்கள்!  
நன்றி வணக்கம்!


 இப்படிக்கு!
 பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 

Wednesday, September 16, 2015

பிள்ளை யார்? நீ யார்? நான் யார்?




பிள்ளையார் சுழி போடலாம் வாங்க! 
சுழிமுனையில் தன்னை தானே வணங்குவதுதாங்க பிள்ளையார் சுழி! 

பிள்ளையார் உருவம்
நம்மை நாமே அறிய ஏற்படுத்திய சூத்திரம்! 

இந்த உண்மையை உணராதவர்களுக்கு
அறியாமையினால் வருவதுதான் ஆத்திரம்! 

சாமி யார்? 

தந்தை யார்? 

தாய் யார்? 

மனைவி யார்? 

கணவன் யார்? 

அண்ணன் யார்? 

தம்பி யார்? 

தமக்கை யார்? 

தங்கை யார்? 

மாமி யார்? 

மாமன் யார்? 

பிள்ளை யார்? 

பெரியவர் யார்? 

சிறியவர் யார்? 

காதலி யார்? 

காதலன் யார்? 

நீ யார்? 

நான் யார்? 

பதில் சொல்லுங்க பார்ப்போம்? 

இப்படிக்கு... 

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!


விழிப்புணர்வு உள்ளவன் விநாயகன்! கண்களை ஆள்பவன் கணபதி!

விழிப்புணர்வு உள்ளவன் விநாயகன்!
விருப்பு வெறுப்பு உள்ளவன் வில்லன்! 


கண்களை ஆள்பவன் கணபதி! 
கண்களை சுழிமுனையில் குவிக்காமல் போனால் கிடைக்குமா நற்கதி? 


நம்முடைய மனம் சித்தம் புத்தி அகங்காரம் ஒன்றுபட்டால் சதுர்த்தி! மேற்கூறிய நான்கும் நமக்கு ஒன்றுபடாவிட்டால் விரக்தி! 


இருகண்களால் மூன்றாவது கண்ணை தொட்டவன் கணேசன்! 
அவனின்றி நமக்கேது பிரமோசன்! 

ஆரம்பம் அவனுக்கு ஆணைமுகம்! 
அவனே ஊழிக்காலத்தில் எடுத்தான் குரங்குமுகம்! 

நம்முடைய முகம்தாண்டா மூலாதாரம்! 
பாவிகளின் வாதமோ மூத்திர துவாரம்! 

ஆதியாம் தும்பிக்கையும்நம்பிக்கையும் அவனே! 
அந்தமாம் வாலில் வனத்தை அழிப்பவனும் அவனே! 

தந்தையாம் அறிவுக்கும் தாயாம் அன்பிற்க்கும் பிறந்த பிள்ளை! 
இந்த உண்மையை உணராதவனுக்கு அவன் எப்பொழுதுமே பொல்லாப் பிள்ளை! 

விக்கினத்தை எதிர்கொள்பவன் விக்கி! 
விக்கினத்தை கடக்காதவனுக்கு கிட்டுமா லக்கி? 


மொத்தத்தில் ஆங்காரம் கடந்து ஓங்காரம் கண்டவன் விநாயகன்! 
கண்டவள் விநாயகி! 

இப்படிக்கு... 

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!



www.natrajcosmic3.yolasite.com

Tuesday, September 15, 2015

What is mean by Lingam? And where is eswaran(God) ?

அன்பர்களுக்கு எமது இனிய ஆத்ம வணக்கங்கள்! நட்டகல்லை தெய்வம் என்று நாலுபுஷ்பம் சாத்தியே !
சுற்றிவந்து முனுமுனுவென்று சொல்லும் மந்திரம்ஏதடா?
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ?
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவைதான் அறியுமோ?"
கோயிலாவது ஏதுடா? குளங்களாவது ஏதுடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே, குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை, இல்லை இல்லையே !
-சிவவாக்கியார் www.natrajcosmic3.yolasite.com

Monday, September 7, 2015

அன்பர்களுக்கு வணக்கம்! அன்னையும் பிதாவும் என்கிற தலைப்பில் உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி! அன்னையே நமக்கெல்லாம் ஆதிகுரு என்பதை யாராலும் மறுக்க முடியாது! ஈன்று புறம்தந்தவுடன் குப்பைத் தொட்டிகளில் குழந்தைகளை தவழவிடும் தாய்மார்கள் இருக்கவும் செய்கிறார்கள்! மொத்தத்தில் ஒரு தாய் நினைத்தால் தன்மகவை சான்றோனாகவும் மாற்றமுடியும் தறுதலையாகவும் மாற்றமுடியும்! சரி இந்த அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார்கள் இது புறம் சார்ந்த விளக்கம் இல்லையா? இனி இதன் அகம் சார்ந்த விளக்கம் என்னவென்று பார்ப்போம் உண்மையில் நம்மை காப்பது இரத்தம் என்று சொன்னால் உங்களால் நம்ம முடியுமா? நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம்மை காப்பது இரத்தம்தான்! இந்த இரத்தம் இல்லாவிடில் உயிர்ப்பில்லை! இந்த இரத்தம்தான் உடலை இரட்சிக்கிறது! இந்த இரத்தம்தான் நமக்கெல்லாம் அன்னையாகிறது! நம்முடைய உடலில் இரத்தமாக இருக்கும் அன்னையை இயக்குவது வாயு என்கிற வாசி என்கிற உயிர்காற்று! மேலும் கீழும் உடல்முழுவதும் சக்தியாகிய இரத்ததை கொண்டு செல்லும் வாயுவுக்கே வாசிக்கே அல்லது உயிர்காற்றுக்கே பிதா என்று பெயர்! கருவுற்ற நாள்முதல் நம்மை கண்ணயறாமல் காக்கும் இறைவனே பிதா நம்முடைய மூச்சு! காக்கும் இறைவி அன்னை நம்முடைய இரத்தம்! இதை அறிந்தவன் அறிந்தவள் தெய்வம் என்பதைத்தான் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று கூறியிருப்பார்கள் என்று கூறி யாம் விடை பெறுகிறோம்! நன்றி! வணக்கம்!