Wednesday, December 9, 2015

ஒருமுறை வாசித்து கடைத்தேறுங்கள்! ஆத்ம சாதனைக்கும் லோக சாந்திக்கும் வழிப்பிறக்கும்!

குரு கடாக்ஷம்
குருவே தெய்வம்....
குருவே தாயும்தந்தையும்....
குருவே சர்வமும்...
குருவே சரணம்.....

ஓம் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிதம்பர சிவப்பொருளே
காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சித்தாகச சிறப்பே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தம்பரத்தனித் தரணியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம்  அம்பரத்து பராபரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஓ ண்மறைத்தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒர்எழுத்து தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மூன்றெழுத்து முதல்வா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவிட உறை சிற்றம்பலமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பொன்னம்பல சபையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அற்புத ஆடலரசே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆனந்த கூத்தரசே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஊழிப்பெரும்நடனத்தரசே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரொடுக்க பெருங்கூத்தரசே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரன்புப்பெருமாளே  காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பிரிவில்லா கலப்பே  காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பூவினத்துள்ள மணமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நறுமண நிறைமதுவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பாலினுள்உறை நெய்யே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேசா பெருமறையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அருட்பெரும்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அம்மை அப்பாவாக நின்றாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரன்பர்விழைப்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பொன்னுரு சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவ சூரியனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பெரும்பேரருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சீர்மேவும்சிவமே
காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நறுமண நந்தவனமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பிறவா பெருநெறியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உள்ளுரும்சோதியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உலகோடுயிரில்உறைபவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒண்மதிப் பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வரம்பில்உயர்தவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உயிரோடு பின்னியனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அகத்தில்ஆடும்அருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உண்ணாடியின்ஆடலரசே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மன உள்ளத்தில்உறைபவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உமையாளுக்கு உகந்தவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் கூத்தாடும்சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஐந்தொழில்காரணனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஐந்தொழல்நடத்தரசே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அக ஆன்ம ஒளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அகத்து ஒளிவிளக்கே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவருள் ஞானஒளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அற்ற பற்று இலானே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அருள்திருவுருவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அடியுணர்வின்திருவருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அன்பர்உள்ளத்து அன்பே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அருட்செல்வ பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இளங்காலை எழுஞாயிறே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஓங்காரத்தின்ஒலியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவசைவ மறையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தண்ணொலி சுடரே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஊனுக்குள்ஒளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உயிரினுள்உறை பேருயிரே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் என்பெருநிலையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவடி திருவுருவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் எட்டும்வான்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அருட்குணக்குன்றே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் எந்தையாம்தந்தையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவசைவ சுத்தபொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இன்ப அருள்வடிவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் எனை ஆண்டருளும்சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் எண்பேர்பெரு உருவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இருநிலமானாய்சிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இன்பத்திருமேனியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இறைநிலை சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இளம்பிறை சூடியவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இனிப்பூட்டு இறைவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அன்புருவ ஆகமமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மறை ஞான சிவப்பழமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இயற்கை உண்மைப்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அறிவின்ப வடிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இரப்பவர்க்கு ஈகையே  காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இருவினை ஒழிப்பாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் களிம்பறுத்தருளிய களியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வானவர்பெருந்தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மூத்த ஆதிமுதல்வா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வரம்பில்லா அருள்வரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செம்மணி ஒளிச்சுடரே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வேண்டுவதை அருள்பவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரின்ப நற்பேரே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பெருவாழ்வு தரு வெண்முத்தே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மெய்யூறும்சிவ அமுதே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் முதிர்மாலை தொழு ஞாயிறே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆரா அருளும்வள்ளலே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அழிவில்லா செல்வமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நலம்நல்கும் நாதா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அருள்வெளி ஞானப்பழமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அழல்வண்ண வடிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நிழல் தரு திருத்தேவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஐந்தெழுத்து அண்ணலே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மறை மாமணி தவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிறப்பறம்கூறும்சிவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நல்லார்புகழும்தெய்வமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அறிவுக்கு பேரறிவானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அடல் ஏறிய விடையனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரருள்மாமழையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் முவ்விழி ஒளியனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அன்பு செய்சுத்த சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இன்பு செய்திருவருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவருள் தரு சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அன்பே பொருளானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அப்பில்உப்பானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அகஇருள் அகற்றுபவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வல்லிருள் அகற்றுபவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அண்டர்குழுத்தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரருள் தரும் அண்ணலே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரண்டக்கற்றூணே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரண்டமூறும்ஆண்டவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தீப்பிழம்பாய்நின்றவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மறையோதும்அன்பர்தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆழிப்படை அருளியவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அளத்தற்கரிய அண்ணா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அண்ணாமலையானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆண்பேரழகானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பெண்பேரழகியானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அலிவுரு பேரழகியானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் முழுமுதல்மூலப்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆதியந்தம்இலாதானே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆவிக்குள்நின்ற ஆதவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒப்பில்லா பேரறிதிருவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அருட்பெருஞ்சுடரே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஞானக்தீக்கொழுந்தே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒளிக்கு ஒளிதருபவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒளிக்குள் ஒலியானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் முச்சுடர்மூத்த அருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிற்றுணர்வு அகற்றுபவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் கட்டுணர்வு எரிப்பவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செழுஞ்சுடர்சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செம்மணி அணிமணி மேனியனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செந்தமிழ்திருத்தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆதிபாகமானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பெருவாழ்வு வித்தகா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பெரும்வளம்தருவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வெள்ளி மலையானே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவாவடு துறையோனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவவொளி தீபமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவருள்திலகமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஐந்தெழுத்து ஆதிநாயகா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நற்றமிழ்தரும்சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நஞ்சுண்ட மணிகண்டா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நீர்மேல்நெருப்பொளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நற்றாய் நல்ல சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவமணம்தரும்திருவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மன மகிழ்இன்ப சுவையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவஞானக்கடல்அமுதே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மாசில்லா மணிமுடியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தென்திசை சிதம்பரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆறாறு கடந்தவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மனம்வாக்கு எட்டா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மூன்றொளி முக்கண்ணா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் முழுநீறு அணியனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வெண்முகில்முனிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மணிமாடத்து மாணிக்கமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிரோன்மணி சிகரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வான்கூரை வடிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வளி ஊறும்வடிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தீயில்வண்ண வடிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மண்ணியல்பொன்வடிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆவிக்கு முத்தியருள்பவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சுட்டறிவுக்கு எட்டாதவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இறவாத இன்ப நிலையமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மேலாம் மெய்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இணைந்திரு அம்ச மந்திரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் முப்பொருள்ஆகம நூலே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மலம்அகற்றும்சிவப்பேறே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தமிழாகம திருவெழுத்தே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தனக்கு தானே தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தனக்கு தானே பெருஞ்செல்வா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தனக்கு தானே ஒப்பானவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தனக்கு தானே முதல்வா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தாயுனும்தயைவுடையவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அன்பறிவாற்றல்இயல்பா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் என்றும்பிறவா முக்கண்ணா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மருட்கை மாய்க்கு கூத்தரசே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இன்பநிலை கூத்தரசி காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவனருள்மந்திர வித்தே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பிறப்பறுக்கும்மந்திரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம்  காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செம்பு பொன்னாக்கு மந்திரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நுண்னுடல்வினை நீக்கும்மந்திரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவடி தரும்பேரின்பமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவைந்தெழுத்து திருக்கூத்தே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆறேழுத்து அருமறையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒரு சுடர்உலகேழானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒங்காரத்துட்ஒண்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மனம்கழிய நின்ற மறையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் போகமருளும்புண்ணியா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வைரவொளி சிகரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் குன்றில்மேல்இட்ட விளக்கே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அஞ்செழுத்தின்அதிபதி சிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அஞ்சு மலம்நசிக்கும்நேசா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒப்பில்லா சிவ ஒளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மறைமுடி ஞான சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தரிசனம்தரும்பரம்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நெற்றி மண்டல அமிழ்தமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அருள்மழை கற்பக சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பரவொளி அருளமுதமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவபோக பெருவாழ்வே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவயோக வடிவழகே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் கரும்பினும்இனியவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் கடலமுதே சுவையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம்  இருபிறப்பு இலாதாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பெரும்பொருட்கிளவியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஐந்தொழில்கடவுளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஐந்தொழில்கூத்தனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வேண்டுவார்வேண்டலை அருள்வாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் விலை வரம்பிலாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செம்மணி ஒளி சிகரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வானவர்மூத்த தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தானவருக்கு அருளும்சிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் புறத்து பிறவா நிலையமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பிறவா பெருநெறியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நீக்கமற நின்ற சிவமேகா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மெய்யடியார்உளமாண்டவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் புண்ணியா புனிதனாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மனமிசைந்த உருவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவடிமுடி சூடிய வேந்தா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வேத ஆகம ஒளிவிளக்கே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சத்தோம்முக சிவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பஞ்செழுத்து பரமனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவடி அமிழ்தமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மெய்யுணர்வு தந்த குருவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரொடுக்க பெருவெளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஐந்துகர ஆதி மந்திர மேகா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மண்மொழி பெருமந்திரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உவமையில்லாக்கலைஞானமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உணர்வரிய மெய்ஞானமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உணர்வின்சிவபோகமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உறவான ஒண்மதியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இருதலை மாமணியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பிறப்பை ஒழிக்கும்அருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மேருமலை அருவெளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரொளிப்பெரு விளக்கே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மன்மனத்து மனோலயமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செம்பொற்சிவகொழுந்தே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தற்பர சிவகொழுந்தே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருசிற்றம்பல சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம்  வான்முதலாய்எழுவாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நிலயிராய்அடலாகாய காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வெண்முகில்திருவண்ணா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் கருமுகில்கருவண்ணா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செம்முகில்செவ்வாய்வண்ணா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பன்முகில்பல்வண்ணா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பரவெளி மெய்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் கானக்கவி விளக்கொளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பொன்னருள்மிகு ஒளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நெஞ்சத்து பெருமஞ்சமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இன்பம்தரும்திருமந்திரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஊழ்கொண்ட திருமந்திரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆவிக்குள்புணரருள்ஊற்றே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆவிக்குள்கலந்தருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பரவெளி கோவிலே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் புருவநடு மதியமிழ்தமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உண்ணீரமுதானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தனிபெருந்தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தமிழாகமத்தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவமங்கை சரிபாகனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வெள்ளை முத்துமணி மலையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செந்தமிழ்வள்ளலே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவடி பெருவாழ்வே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பெண்வளர்பூமியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவெள்ளி மலையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அடிமுடி காணமுடியாத சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பொருள்சேர்புகழ்புனிதா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரண்டவெளி சிவசுடரே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தொண்டர்தம்துணைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அஞ்சு களிறு அடக்கியவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆண்பெண்அலி வடிவாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆவிக்குள்பூக்கும்சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆவிநிறையருள்அன்பா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒப்பில்லா பேரறிவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவம்ப்பெரும்சோதியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒளிக்குள்ஒளியானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒலிக்குள்ஒலியானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உள்ளத்துரைவிட சோதியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அகரத்தில்திகழ்பவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆன்ம நிறை ஒளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அற்ற பற்று அருள்வாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவஅருட்செல்வா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அரும்பொன்ஆக்குவாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் விண்ணின்விளாம்பழமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அகவிருட்டு அகற்றுவாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அச்சுதனுக்கு ஆழியளித்தாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நமசிவாய சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவாய நம சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவாய சிவ சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவாய வசி சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவ வசிய சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வசிய சிவ சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவ சிவ சிவ சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிகார தகர சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உடற்கோவில்திருவிளக்கே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருமுறை ஞானப்பாலே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் போதம்தரும்நிலையமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சுத்த சன்மார்க்கமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பிறப்பிலி முதல்வா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் கன்னித்தமிழ்கன்னலே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பதமுத்தி பாதையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் முத்தமிழ்வேத இதையமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவகுருவான சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நஞ்சுண்டு காத்த நைனா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சமநிறைவாய்நின்ற சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவருட்கல்வி அருள்வாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இயற்கை மணிவிளக்கே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உண்மை கல்வி அருள்வாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செந்தமிழ்மாமறை அருள்வாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவநாம செம்மேனியனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உள்ளெழும்தௌ;ளிய பண்ணே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நிறையருட்சிவகுருவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பெருநிலமா வடிவாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நிலக்கண்பரவிய நீரே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நீர்மேல்மேவிய தீயே
காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தீயின்கண்ஊடுறவும்காற்றே விண்ணே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் காற்றில்சேர்ந்து விரிந்து விண்ணே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அழிவில்லா விழுப்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் விடியா ஒளிவிளக்கே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பாலொத்த முத்து மேனியனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் கல்லார்உள்ளுரைக்கனியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தூய நற்சொல்பேருரையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செம்பொருட்செங்கோலே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆணிப்பொன்னம்பலமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மூல விளக்கொளி மூலமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சீயெழுத்தின்சிகரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நாயோட்டு மந்திர நாதனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நாத விந்து மெய்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவம்பல திருச்சுடரே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம்  காகாபுசண்ட மகரிஷியே போற்றி....போற்றி.....
ஓம் லோக சாந்தி...
ஓம் லோக சாந்தி...
ஓம் லோக சாந்தி...







Wednesday, December 2, 2015

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்

சீதக் களம்பச் செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பல இசைப்பாடப்
பொன்னரை ஞானும் பூந்துகிலாடையும்
வண்ணமருங்கில் வளர்ந்தழகெறி;ப்பப்
பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந்துரமும்
ஐந்துகரமும் அங்குசபாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் திரண்ட முப்புரி நூல்
திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த
துரிப மெய்ஞ்ஞான அற்புத நின்ற 
கற்பகக் களிறே 
முப்பழ நுகரும் மூசீக வாகன
இப்பொழுதென்னை யாட்கொள வேண்டித்
தாயாயெனக்குத் தானெழுந்தருளி
மாயாப்பிறவி மயக்கமறுத்து
திருந்திய முதலைந்தெழுத்துந்
தெளிவாய் பொருந்தவே வந்தெனுளந்தனிர் புகுந்து
குருவடிவாகிக் குவலயந்தன்னில்
திருவடி வைத்துத் திரமிது பொருளென
வாடாவகைதான் மகிழ்ந்தெனக்கருளி
கோடாயுதத்தாற் கொடுவினைகளைந்தே
உவட்டா வுபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங்காட்டி 
ஐம்புலன்தன்னை அடக்குமுபாயம்
இன்புறுங்கருணை இனிதெனக்கருளிக்
கருவிகளொடுக்கும் கருத்தினையறிவித்
திருவினைதன்னை அறுத்திருள்கடிந்து
தலமொருநான்குந் தந்தெனக்கருளி
மலமொருமூன்றின் மயக்கமறுத்தே
ஒன்பதுவாயில் ஒருமந்திரத்தால்
ஐம்புலக்கதவை யடைப்பதுங்காட்டி
ஆறாதாரத் தங்குசநிலையும்
பேறாநிறுத்தி;ப் பேச்சுரையறுத்தே
இடைப்பிங்கலையி னெழுத்தறிவித்துக்
கடையிற் சுழிமுனைக் கபாலமுங்காட்டி 
மூன்று மண்டலத்தின் முட்டிய 
தூணின் 
நான்ரெழுபாம்பின் னாவிலுணர்த்திக்
குண்டலியதனிற் கூடியவசபை
விண்டெழுமந்திரம் வெளிப்படவுரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழுகனலைக்
காலாலெழுப்புங் கருத்தறிவித்தே
அமுதநிலையும் ஆதித்தனியக்குமும்
குமுதசகாயன் குணத்தையுங்கூறி
இடைச்சக்கரத்தின் உறுப்பையுங்காட்டி
சண்முகதூலமுஞ் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக வினிதெனக்கருளி
என்னையறிவித் தெனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக்களைந்து
வாக்கு மனமும் இல்லா மனோலயம்
தேக்கியேயென்றன் சிந்தை தெளிவித்
திருள்வெளியிரண்டுக் கொன்றிடமென்ன
அருள் தருளானந்தத் தழுத்தியென் செவியில்
எல்லையில்லா வானந்தமளித்து
அல்லல்களைந்தே யருள் வழிகாட்டிச்
சத்தத்தினுள்ளே சதா சிவங்காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கங்காட்டி
அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமுநீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக்கரத்தின் அரும் பொருட்ன்னை
நெஞ்சக்கரத்தினிலை யறிவித்துக்
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயக விரல்கழல் சரணே....

ஓம் உலக சாந்தி.....
ஓம் உலக சாந்தி.....
ஓம் உலக சாந்தி.....

Thursday, November 5, 2015

முதலில் மாட்டிறைச்சிக்காகவே மாடு மேய்க்க துவங்கினாய்.....



ஏதோ பஞ்சம் வந்த காலத்தில்
மழை பொய்த்த நேரத்தில் 
ஆடு மாடு கோழிகளை ருசி பார்த்த  மனிதனே.....

பஞ்சம் போன பிறகும் நீ
மழை பொழிந்த பிறகும் நீ
காய் கனிகளை கண்ட நீ
செடி கொடிகளை உண்ட நீ
ஊண் உடலைத் தேடி நீ
குக்கல் போல் அலைவது ஏனோ?

ஆரம்பத்தில் பசித்தீயை அணைக்கவே
ஆடு மாடு அனைத்தையும் பச்சையாக உண்ட நீ...
நெருப்பு வந்த பின்னரே சுட்டுத் திண்ண துவங்கினாய்....

முதலில் மாட்டிறைச்சிக்காகவே மாடு மேய்க்க துவங்கினாய்.....
எருதின் பலம் தெரிந்ததும் 
ஏர் பூட்டி ஓட்டினாய்.....
சக்கரம் வந்த பின்னரே 
மாட்டு வண்டி ஓட்டினாய்....

பசுவுடன் பழகியே பால் கரக்க துவங்கினாய்.....
பால் கரந்த பசுவெல்லாம் மாட்டுப்பால்
மாட்டுக்கே என்று அடம்பிடிக்கவில்லையே....

பசுவிடம் பால்கரந்த மனிதனே
இரத்தம்தான் பால் என்பதை 
எப்பொழுது உணர்வாயோ....

பால்தந்த பசுவெல்லாம் வாழ்நாள் முழுக்க பணியவே...
பாலே உணவென ஆனபின் பால்குடித்த மனிதனே... 
நீயும் கொழுக்க துவங்கினாய்.....

பாலின் பயன் உணர்ந்த நீ
பாலுடன் இனிப்பு சேர்த்து பருகினாய்...

பாங்காய் பாலைக் காய்ச்சியே
பால் சோறு அருந்தினாய்...

பசி தீர்த்த பாலை நீ வகையரிந்து
உணவில் கலக்கவே நீயும் நுகர துவங்கினாய்.....

புளித்த உன் விரல் பட்டதும்
பால் மறுநாள் தயிரானதும்
உன் கண்டுபிடிப்பே....

பால் சோறு உண்ட நீ
தயிரின் வருகையால் தயிர்  சோறுக்கு
மாறினாய்.....

பால் தந்த பசுவையும் 
ஏர் பூட்டிய மாட்டையும் தெய்வமாக மாற்றினாய்.....

பால் வணிகம் செய்யவே 
பாலுடன் நீரை கூட்டினாய்....
பால் கூடுதல் ஆனதால்
பாங்காய் வியாபாரம்; பெருக்கினாய்.....

பாலை நீயும் கூட்டவே
பாலுடன் நீரை கலந்த நீ
தயிர் வணிகம் பெருக்கவே
தயிருடன் நீரை கூட்டீனாய்.....
அச்சச்சோ....
தயிர்  மோரும் ஆனதே......

மோரை மோர்ந்த மனிதனே
மோரை பருக துவங்கினாய்....

பால் சோறு கண்ட நீ
தயிர்  சோறு உண்ட நீ
மோர்  சாதம் உன் புதுப்படைப்பே....

தாகம் தீர்த்த மோரினால் உன் 
பித்தமும் தணிந்து போனதே...
பித்தம் தெளிந்த மோரினால்
உன் சித்தமும் தெளிந்து போனதே...
உன் சித்தம் தெளிந்து போனதால்
மோரை குடிக்க பழகினாய்....

மோரை பருகும் போது நீ
மோரில் மிதக்கும் மிதவையை
மெல்ல சேர்க்க துவங்கினாய்....
சேர்த்து வைத்த மிதவையை 
மெல்ல திண்ண பழகினாய்....

எண்ணெய் வாடை வீசியதால்
மிதவையை வெண்ணை என 
அழைத்திட்டாய்....
வெண்ணை உண்ட வாயினால்
மண்ணளக்க முடியுமே....
மண்ணளக்கும் வித்தையை
வெண்ணை தந்து உதவுமே....

மோரை கடைந்த மனிதனால்
வெண்ணை எடுக்க முடிந்தது....
வெண்ணை உண்ட வாயினால்
மாடு திண்ண முடியுமோ?

வெப்ப கண்ட வெண்ணையும்
முறையாய் உருகிப்போனதே....
நீர்  பிரிந்து போனதால்
வெண்ணை நெய்யும் ஆனதே...

உண்ணும் உணவில் அனைத்திலும்
நெய் சேர்க்க துவங்கினாய்...
நெய் சேர்த்த உணவெல்லாம்
நெய் மணக்க செய்திட்டாய்....

நெய்யை உண்ட மனிதனால்
மாட்டைக் கொல்ல முடியுமோ...
மாட்டைக் கொல்லும் மனிதனே...
உனக்கு நெய்யின் குணம் தெரியுமோ?

நெய்யின் குணம் தெரிந்தவனே
மாட்டை மதிக்க துவங்குகிறான்....

பஞ்சம் வந்த காலத்தில்
பட்டினையை போக்கவே
மாடு திண்ற மனிதர்களே....
உப்பு நெருப்பு இன்றியே...
மாட்டிறைச்சி திண்ணுங்களேன்.....

இறந்து போன பெண்ணை நீ
புணர்ந்து என்ன லாபமோ....
செத்துப்போன மாட்டை நீ
உண்டு என்ன லாபமோ?

ஏ மனிதனே...
பால் தந்த பசுவினை 
பால் மாறாமல் கொல்வது ஏனோ?

தயிரு தந்த தங்கத்தை கேவலம்
எலும்புக்காக கொல்வது ஏனோ?

மோர்  தந்த பசுவினை மோசம் செய்த மனிதனே.... 
மோட்சம் உனக்கு கிடைக்குமோ?

வெண்ணை தந்த பசுவினை வெட்ட
துணிந்த மனிதனே...
வெட்கப்பட வேண்டுமே....
மனிதனென்று சொல்லவே....

நெய் தந்த பசுவினை நெத்தியில்
அடிக்கும் போது என்ன வலி நேருமென்று நீயும் கொஞ்சம் நெனைச்சுப் பாரு........
நன்றி.....
வணக்கம்.....
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!

Saturday, October 31, 2015

அறம் செய்பவர் அந்தணர்! பிராணாயாமம் செய்பவர் பிராமணர்!


சக தோழமைகளுக்கு வணக்கம்!


அறம் செய்பவர் அந்தணர்! பிராணாயாமம் செய்பவர் பிராமணர்! ஒருவருடைய அல்லது ஒருத்தியினுடைய செயல் அதாவது நடத்தைதான் அவர்களை நமக்கு இன்னார் என்று அடையாளப்படுத்தி காட்டுகிறது! பொதுவா நாம் எந்த சாதியில் பிறந்தோம் என்பது முக்கியமல்ல! என்ன நாம் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்!  

எண்ணம் சொல் செயல் இம்மூன்றும்தான் நம்முடைய சாதியை தீர்மானிக்கின்றது! சுதந்திரம் நமது பிறப்புரிமை என்பதுபோல் எண்ணுவதும் சொல்லுவதும் செய்வதும் அவரவர் பிறப்புரிமையே! சமதர்மம் வேண்டுமென்றால் தாழ்வு மனப்பான்மையை வஞ்சகமாக விதைக்கும் கயவரை இனங்கண்டு களை எடுக்க வேண்டும்!

உள்ளுவதெல்லாம் உயர்வாக இருக்க வேண்டும்! உள்ளத்தில் உறுதி இருக்குமானால் உங்களை யாரால் தாழ்த்த முடியும்? 

எண்ணத்தை பார்ப்பவன் பார்ப்பான்! எண்ணத்தை திறம்பட செய்து முடிப்பவன் சத்திரியன்! எண்ணத்தை கையாள்பவன் வைசியன்! எண்ணத்தை எதிர்கொள்ள முடியாமல் எண்ணத்தின் பின் அலைபவன் சூத்திரன்! இப்பொழுது புரிகிறதா எண்ணம்தான் நம்முடைய சாதியை தீர்மானிக்கின்றது!

உதாரணமாக தீய எண்ணம் உங்களுக்குள் வருமாயின் அந்த எண்ணத்திற்கு உடன்பட்டால் முதலில் பாதிக்கப்போவது மனம், பிறகு உங்கள் வாக்கு, அதாவது சொற்களை பாதிக்கும், பிறகு உங்கள் நடத்தை அதாவது செயலையும் பாதிக்கும்! இப்பொழுதுதான் நீங்கள் அவப்பெயருக்கு ஆளாகின்றீர்கள்! 

இப்படி கீழான எண்ணங்களை கைகொள்பவர் கீழ்சாதிக்காரர்கள் மேலான எண்ணங்களை கையாள்பவர்மேல்சாதிக்காரர் என்றால் அது மிகையாகாது! 

யாம் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால் மேலே வானம்.... கீழே பூமி..... உங்களை தாழ்த்த யாரால் முடியும்? எண்ணம் சொல் செயல் இம்மூன்றும் சரியாக இருக்குமாயின் அதன் விளைவுகளும் சரியாக இருக்கும்! என்பது எம்முடைய தாழ்மையான கருத்து!


நன்றி வணக்கம்! 
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!




Friday, October 30, 2015

தமிழ்நாட்டை தமிழர்களால் ஒருபோதும் ஆளமுடியாது!



தமிழ்நாட்டை தமிழர்களால் ஒருபோதும் ஆளமுடியாது! காரணம் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்பதற்க்காக யாம் மேற்படி கூறவில்லை ! தமிழர்களுக்கு இது ஒரு பொல்லாத காலம் என்றே சொல்ல வேண்டும்!

தமிழர்நாடு தமிழர்வசம் இருந்தால் காலம் நம்கையில் என்று பெருமிதம் கொள்ளலாம்..... ஆனால் காலத்தின் சாபமோ என்னவோ தமிழகத்தை ஆள்பவர்கள் தமிழரல்லாத மாற்று மொழி இனத்தவர்களே என்றால் அது மிகையாகாது ! 

மாற்று இனத்தவரின் சூழ்ச்சிகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு தமிழர்களுக்கு அறிவு இல்லை என்றே சொல்ல வேண்டும்! காரணம் அந்த அளவிற்கு ஆதிதமிழர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது? அந்த அளவிற்கு தங்கள் மூளையை பயன்படுத்தும் மாற்று இனத்தவரின் ஒற்றுமை மெய்சிலிர்க்க செய்கிறது! இன்னொன்றும் கூற கடமைப் பட்டுள்ளோம் அதாவது தமிழ்நாட்டை தமிழர்கள் ஆள வேண்டுமென்றால் தமிழர்களுக்கு சில சிறப்பு தகுதிகள் வேண்டும். 

முதல் தகுதி பொய் சொல்ல தெரிந்திருக்கவேண்டும். 
இரண்டாவது தகுதி திருட தெரிந்திருக்கவேண்டும் பின் திருடியவுடன் பதுங்கும் தகுதி! மூன்றாவது தகுதி கொலை கொள்ளை ஊழல் லஞ்சம் லாவண்யங்களை சுவடு தெரியாமல் மறைக்கும் தகுதி!

நான்காவது தகுதி விபச்சாரம் செய்ய தன்னை அர்பணிக்கும் தகுதி. ஐந்தாவது தகுதி கணக்கில் வராத பணத்தை வசூல் செய்வது அல்லது மிரட்டி பிடுங்குவது! இல்லையேல் கள்ள கறுப்பு பணத்தை விபச்சாரத்தின் மூலம் சம்பாதிக்கும் தகுதி! 

இப்படி மேற்கூறிய தகுதிகள் தமிழர்களுக்கு என்றைக்கு கிடைக்கிறதோ! அன்றைக்குத்தான் தமிழர்களால் தமிழ்நாட்டை ஆளமுடியும்!

இந்த உண்மையை அறிவுமங்கிய படித்த பெரிய பதவி வகிக்கும் தமிழர்கள் உணர்வது கடினமே! காலத்திற்கேற்றார்போல் தங்கள் தகவமைப்பை மாற்றிக்கொள்ள முடியாத தமிழர்களின் கனவுகள் ஏக்கங்கள் புலம்பல்கள் எல்லாம் வெறும் கொக்கரிப்பாகவே போய்விட்டது! தமிழர்களின் நிலையோ அந்தோ பரிதாபம்!

மேற்கூறிய தகுதிகள் தமிழர்களுக்கு ஒருங்கே அமையாது என்பதும் காலத்தின் சாபக்கேடு என்பதா? விதி என்பதா? தமிழர்களின் பலகீனம் நன்றிவுணர்ச்சி, இந்த பலவீனமே எதரிக்கு பலம் என்பதை தமிழகத்தை ஆளும் மாற்று இனத்தவர்களுக்கு நன்றாக தெரியும் ஆனால் அறிவுமங்கிய படித்த அடிமை தமிழர்களுக்கு புரியாது! 

என்னடா தமிழர்களுக்கு எதிராக எழுதுகிறோம் என்று வருத்தப்பட வேண்டாம்! ஏன் என்றால் மேற்கூறிய தகுதிகள் தமிழர்களுக்கு கிடையாது அதனால்தான் தமிழ்நாட்டை தமிழர்களால் ஆளமுடியாது என்று தலைப்பை தேர்வு செய்தோம்!

ஒருவேளை படித்த சுயமிழந்த அறிவு மங்கிய தமிழர்களுக்கு தாங்கள் எவ்வளவு பெரிய பதவி வகித்தாலும் தாம் ஒரு சுயம் இழந்த அடிமை என்கிற அறிவு வருமாயின் சாண்றோர்களின் துணையோடு வரலாற்றை அறிந்து அவர்களின் வழி வந்தால் தமிழர்களுக்கு விடிவு காலம் எனலாம் இல்லையேல் இருண்ட காலமே!

யாம் ஏற்கனவே கூறியதுபோல் இது பொல்லாத காலம் பொய் களவு கொலை கொள்ளை விபச்சாரம் மேலோங்கி தர்மத்தை வீழ்த்தும் காலம்! ஆதலால் தமிழர்களே தர்மத்தில் நிலைத்திருங்கள் காலம் மாறும் தர்ம சக்கரம் நமக்கு துணை செய்யும் என்று கூறி விடை பெறுகிறோம்!


நன்றி வணக்கம்! 
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!

















Saturday, October 3, 2015

காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ப்பது கழிவு நீரா? சாயக்கழிவா?



               காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ப்பது கழிவு நீரா? சாயக்கழிவா? என்னடா பட்டிமன்ற தலைப்பு மாதிரி இருக்கே என்று நீங்கள் யோசிப்பது எமக்கு புரிகிறது! வாதம் புரிந்தாலும் வழிகிட்டாது! கடிதம் வரைந்தாலும் வழிகிட்டாது! என்பதை யாம் அறிவோம்! அதாவது காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ப்பது சாயக்கழிவும் கழிவுநீரும் இரண்டுமே என்றால் அது மிகையாகாது! 

              சரி இந்த புனித நீரால் ஏற்படும் நன்மைகள் என்ன ? இந்த புனித நீர் எந்த ஏரியில் கலக்கிறது என்பது குறித்து பார்ப்போம்!

              காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு  திருக்காளிமேடு வழியாக பயணித்து   நத்தப்பேட்டை எனும் விவசாய ஏரிப்பாசன நீரில் கலக்கிறது! அந்த ஏரி நிறைந்து நாசமாகி அந்த புனித நீரால் விவசாயம் கெட்டு கலியனூர் மண்ணும் கெட்டு கடைசியில் மடைமாற்றம் செய்யப்பட்டு எங்கள் பூசிவாக்கம் கிராமத்துக்கு சொந்தமான ஏரியில் வந்து அந்த புனித நீர் கலக்கிறது! 

              ஏற்கனவே ஐயம்பேட்டை, முத்தியால்பேட்டை சாயக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட எங்கள் ஏரிநீரும் மண்ணும் மாறுவதற்கே பலநூறு வருடம் பிடிக்கும். இந்த தருவாயில் மீண்டும் தற்பொழுது காஞ்சிபுரத்திலிருந்து வரும் இந்த கழிவுநீரால் இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ  மண்ணின் நிறம் மாறுவதற்கு? யாரரிவார்? 

              எங்க ஊர் மண்ணோ  முக்கால்வாசி கெட்டுவிட்டது இதை யார் ஈடு செய்ய போகிறார்கள் ? 

              எங்க ஊர் ஏரியும் சாயக்கழிவால் நிறைந்து நாசமானது போதாமல் அடுத்து பலியாக போவது ஊத்துக்காடு ஏரி என்றால் அது மிகையாகாது! காஞ்சிபுரத்திலிருந்து வருவது கழிவு நீரோ..... சாயக்கழிவோ.....

பாழாய் போனதே விளைநிலங்கள்! 
பாழாய் போனதே எங்கள் ஊரின் சுற்றுப்புற சூழல்! 
பாழாய் போனதே நிலத்தடி நீர்! 


              கேட்பதற்கு நாதியில்லை! பதில் சொல்ல யாருமில்லை!
என்பதை யாமறிவோம்! இருப்பினும் இப்பொழுது இதை யாம் பதிவு செய்யாவிட்டால் வருங்கால சமுதாயம் எம்மை கேள்விகேட்குமே என்பதற்காகவும் சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து மண்வளத்தை காப்பார்கள் என்கிற நம்பிக்கையில் யாம் இங்கே பதிவு செய்கிறோம்! 

               இனி வருங்காலத்தில் எங்க ஊரில் விவசாயம் செய்ய முடியாது இது திண்ணம்! எப்பொழுது விவசாயத்தை புறக்கணிக்கின்றோமோ அப்பொழுதே அழிவு ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்!                     

               நிமிர்ந்து நில்!
              துணிந்து கேள்! 
              ரெளத்திரம் பழகு! 
     
              என்கிற வரிகளின் அர்த்தம் எப்பொழுது எங்க ஊர் இளைஞர்களுக்கு புரியப்போகிறதோ? யாம் அறியோம் பராபரமே! 

             இறைவா இந்த கழிவுநீரால் நாசமாகும் எங்கள் மண்ணை காப்பாற்ற வழிகாட்டு! மனிதனுக்கு மனுப்போட்டா நடவாது என்பதற்காகவே! இறைவனிடம் இந்த விண்ணப்பத்தை சமர்பிக்கிறோம்! 

மண்ணின்றி விவசாயமில்லை! 
விவசாயமின்றி அரசுமில்லை! 
கவனத்தில் கொள்வோமாக! 

நன்றி வணக்கம்! 
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!


Friday, September 25, 2015

மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு...




பெறுநர்: 

                மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள், 
                புது தில்லி-110001 
                WWW.narendramodi.in www.facebook.com/narendramodi             
                www.twitter.com/narendramodi 


                மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு, 
பூசிவாக்கம் கிராம பொதுமக்களின் பணிவான வணக்கங்கள்! தங்களுடைய நலனை காக்க எல்லாம் வல்ல இயற்கை அன்னை துணை நிற்பாள் என்று பரிபூரணமாக நம்புகிறோம்! 

               ஐயா இந்த கடிதத்தின் மையநோக்கம் என்னவென்றால் எங்கள் கிராமத்தின் வழியாக பயணிக்கும் காஞ்சிபுரம் சென்னை செல்லும் ரயில்கள் எங்கள் ஊரில் நின்று செல்ல ஏதுவாக ஒரு இரயில்வே நிலையம் அமைக்க வேண்டிதான் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறோம் என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறோம் ஐயா! 

                எங்கள் ஊரில் இரயில் நிலையம் அமையுமானால் அருகிலுள்ள நெய்க்குப்பம், கிதிரிப்பேட்டை, புத்தகரம், பாவாசாகிப்பேட்டை, திம்மராஜாம்பேட்டை, புதுப்பேட்டை, ஏகனாம்பேட்டை, நாயகன்பேட்டை, தாங்கி, வில்லிவலம், கிராமவாழ் பயணிகளுக்கு சென்னைக்கும் இந்தியாவின் பிறபகுதிகளுக்கும் பயணிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மிகவும் பணிவன்புடன் சுட்டிக்காட்டுகிறோம் ஐயா! 

               மேற்கூறிய கிராம பொதுமக்களின் சார்பாகவும் எங்கள் ஊர் சார்பாகவும் இந்த கடிதத்தை விண்ணப்பமாக ஏற்று இந்திய ரயில்வே துறைக்கு தங்களுடைய பரிந்துரையின் கண் எங்கள் ஊருக்கு இரயில் நிலையம் ஒன்றை அமைத்து பயணிகளின் சிரமத்தை குறைப்பீர்கள் என்று நம்பியே இந்தக்கடிதத்தை தங்களின் திருப்பார்வைக்கு அனுப்பிவைக்கிறோம்! 

வாழ்க பாரதம்! 
வாழ்க தேசியம்! 
வாழ்க தமிழகம்! 
வாழ்க தமிழர்கள்! 

இப்படிக்கு......
                                                                                                                                                                    பூசிவாக்கம் கிராமபொதுமக்கள்! 
எண்.82,பூசிவாக்கம், 
ஏகனாம்பேட்டை அஞ்சல், 
காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு. 
இந்தியா. 
தபால் பெட்டி எண்:631601

Thursday, September 24, 2015

விவசாயத்தை புறக்கணித்துவிட்டு எந்த ஒரு நாடும் வல்லரசு ஆகமுடியாது!

              



                  விவசாயத்தை புறக்கணித்துவிட்டு எந்த ஒரு நாடும் வல்லரசு ஆகமுடியாது! எப்பொழுது விவசாயிகள் மதிக்கப்படுகிறார்களோ அன்றைக்கே அந்த நாடும் மதிக்கப்படும்! விவசாயிகளை புறந்தள்ளிவிட்டு மற்றதுறைகளை வருமானத்திற்காக விருது கொடுத்து வளர்த்தாலும் வீழ்ச்சியே விளையும்! 

                 யார் நம்முடைய வயிற்றுக்காக   உழைக்கிறார்களோ   அவர்களுக்கு  பாதுகாப்பு கொடுங்கள்! சிறப்பு அடையாள அட்டை கொடுங்கள்! மிகப்பெரிய விருது கொடுங்கள்! வட்டியில்லா கடன் கொடுங்கள்! குறைந்தபட்சம் ஊர்புறங்களுக்கு வந்து ஊக்கமாவது கொடுங்கள்! முதலில் விவசாயிகளுக்கு மரியாதை கொடுங்கள்!  
மற்ற எல்லா துறையும் தானாக வளரும்!

                  மண்ணுக்குண்டானவர்களை மதிக்க தவறினால்..... விரைவில் அந்த நாடு அழியும்! மண்ணையும் மக்களையும் காக்கமுடியாத பட்சத்தில் விபச்சாரம் பெருகும், கலகநாசம் உண்டாகும், மதுவும் மாதும் மக்களை ஆட்சி செய்யும், அரசு அழியும்! வறுமை வாட்டும்! கள்ளப்பணம் பெருகும்! கறுப்பு பணம் கைமாறும்! மந்திர தந்திரங்கள் வலுபெரும்! ஆத்மீகம் அரசியல் அறம் தவறி நாசமடையும்! பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் இருப்பார்கள்! ஆதலால் ஒரு அரசாங்கம் எப்பாடுபட்டாவது விவசாயிகளை காக்கவேண்டும் என்பதுதான் எம்முடைய பணிவான வேண்டுதல்!

                     டாக்டருக்கு அரசாங்க ஊழியருக்கு, தனியார் துறை ஊழியருக்கு, பெண்தருகிறார்கள்! விவசாயம் செய்பவருக்கு பெண் கொடுக்க மறுக்கும் ஒரு கேவலமான நிலைமையை யாம் உணர்கிறோம்! குறிப்பா சொல்லப்போனால் பெண்கள் இல்லாமல் விவசாயத்தை நினைத்துகூட பார்க்க முடியாது எனலாம்! ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழே மாறிவருகிறது! இப்பொழுதெல்லாம் கிராமத்து பெண்களை ஏற்றிச்செல்ல கம்பெனி வேன்கள் ஊருக்குள் வருவதை முன்னேற்றமாகப் பார்ப்பதா வருங்காலத்தில் வர இருக்கம் ஆபத்தாக பார்ப்பதா என்று எம்மால் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை! 

                    பெண்கள் விவசாயத்தை மறப்பார்களானால் பேரழிவு நிச்சையம்! இந்த நிலை நீடித்தால் மண்ணெல்லாம் பொன்னாகாது, பிளாட்டாகும்! என்று கூறி விடைபெறுகிறோம்! கூடுமானவரை மண்ணையும் உழைக்கும் மக்களையும் காப்பாற்றுவோம்!

வானின்றி நீரில்லை!

நீரின்றி உலகமில்லை! 

மண்ணின்றி விவசாயமில்லை! 

விவசாயமின்றி அரசுமில்லை! 

கவனத்தில் கொள்வோமாக! 

நன்றி வணக்கம்! 
இப்படிக்கு 

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!


Tuesday, September 22, 2015

வணக்கம் பண்பலைக்கு ஓர் கடிதம்!

     


                வணக்கம் பண்பலைக்கு வணக்கம்! கடந்த நான்கைந்து நாட்களாக இணையத்தின் ஊடாக வணக்கம் பண்பலை கேட்க நேர்ந்தது! ஒரிரு நிகழ்ச்சிகள் மட்டுமே கேட்க முடிந்தது! 

                அந்த வகையில் தூங்க நகரம் நிகழ்ச்சி மட்டுமே எங்களுக்கு பகலில் கேட்ககூடிய நிகழ்ச்சி! மற்ற நிகழ்ச்சிகள் ஒரு சில நிமிடம்தான் எம்மால் கேட்க முடியும்!

               தமிழ்நாட்டில் தமிழ் பண்பலைகளுக்கு பஞ்சமே இல்லை எனலாம்! இருப்பினும் கடல்கடந்து கேட்கும்போது ஏதோவொன்று எம்மை ஈர்க்கவே செய்கிறது! கேட்க இனிமையாக இருக்கிறது!

               பொதுவா கேட்பவருக்கு விருப்பம் இல்லையென்றால் எவ்வளவு நுட்பமான இசையென்றாலும் இரைச்சலாகத்தான் கேட்கும்! தொகுப்பாளர்கள் முழு ஈடுபாடுடன் தொகுத்தளிக்கும் நிகழ்ச்சி அனைவராலும் விரும்பப்படும்! 

               இயந்திரத்தனமான தொகுப்பாளர் ஒரு கூலி ஆள்மட்டுமே! இயல்பான ஒரு தொகுப்பாளர் எந்தப்பாடலை ஒலிபரப்பினாலும் இனிமையே!

               வணக்கம் பண்பலையில் பணியாற்றும் அனைவருக்கும் வணக்கம் கூறி விடைபெறுகிறேன்!

பெருமை கொள் தமிழா!

வாசகம் உற்சாகம்!

 அருமை!

நன்றி வணக்கம்!

இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 




Monday, September 21, 2015

ஆழம் பார்த்தவன் கடலை ஆள்கிறான்! கரைகண்டவன் கடவுளாகிறான்!



              ஆரம்பத்தில் அவன் கடலைக்கண்டு அஞ்சினான்! இந்த பூமியைவிட பரப்பளவில் பெரியது என்பதால்! சரி கடலில் இறங்கித்தான் பார்க்கலாம் என்றால் ஆழத்தை கண்டு அஞ்சினான்! 

             சரி கடலை கடந்துவிடலாம் என்று அவன் நினைத்தபோது வானத்தை தொட்டு காட்சியளிக்கும் கடலை பார்த்ததும் ஆகா நாம கரையேரவே முடியாது என்று முடிவு செய்துவிட்டான்! 

              இப்படி பயந்து கொண்டிருந்த அவன் ஒரு நாள் சிந்திக்க துவங்கினான்! இந்த பூமியைவிட பரப்பளவில் கடல் பெரியதாக இருந்தாலும் அந்த கடலை சுமப்பது இந்த பூமி என்பதை உணர்ந்து கொண்டான்!

             கடலின் ஆழத்திற்க்கும் ஒரு எல்லை உண்டு என்பதை புரிந்து கொண்டான்! கடல் கடந்தான் கரைக்கண்டான் கரையேறினான்! 

             இந்த கடலின் அனைத்து குணங்களையும் கொண்டவள்தான் பெண் என்பதையும் அவன் புரிந்து கொண்டான்! பயந்தவனை பெண் என்கிற கடல் மெல்ல கொன்றுவிடுகிறது! 

            துணிந்தவனை எதிர்நீச்சல் தெரிந்தவனை பெண் என்னும் கடல் மெல்ல அவனை கரை சேர்த்துவிடுகிறது! 

            ஆழம் பார்த்தவன் கடலை ஆள்கிறான்! கரைகண்டவன் கடவுளாகிறான்!


நன்றி வணக்கம்!

இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!