Thursday, November 5, 2015

முதலில் மாட்டிறைச்சிக்காகவே மாடு மேய்க்க துவங்கினாய்.....



ஏதோ பஞ்சம் வந்த காலத்தில்
மழை பொய்த்த நேரத்தில் 
ஆடு மாடு கோழிகளை ருசி பார்த்த  மனிதனே.....

பஞ்சம் போன பிறகும் நீ
மழை பொழிந்த பிறகும் நீ
காய் கனிகளை கண்ட நீ
செடி கொடிகளை உண்ட நீ
ஊண் உடலைத் தேடி நீ
குக்கல் போல் அலைவது ஏனோ?

ஆரம்பத்தில் பசித்தீயை அணைக்கவே
ஆடு மாடு அனைத்தையும் பச்சையாக உண்ட நீ...
நெருப்பு வந்த பின்னரே சுட்டுத் திண்ண துவங்கினாய்....

முதலில் மாட்டிறைச்சிக்காகவே மாடு மேய்க்க துவங்கினாய்.....
எருதின் பலம் தெரிந்ததும் 
ஏர் பூட்டி ஓட்டினாய்.....
சக்கரம் வந்த பின்னரே 
மாட்டு வண்டி ஓட்டினாய்....

பசுவுடன் பழகியே பால் கரக்க துவங்கினாய்.....
பால் கரந்த பசுவெல்லாம் மாட்டுப்பால்
மாட்டுக்கே என்று அடம்பிடிக்கவில்லையே....

பசுவிடம் பால்கரந்த மனிதனே
இரத்தம்தான் பால் என்பதை 
எப்பொழுது உணர்வாயோ....

பால்தந்த பசுவெல்லாம் வாழ்நாள் முழுக்க பணியவே...
பாலே உணவென ஆனபின் பால்குடித்த மனிதனே... 
நீயும் கொழுக்க துவங்கினாய்.....

பாலின் பயன் உணர்ந்த நீ
பாலுடன் இனிப்பு சேர்த்து பருகினாய்...

பாங்காய் பாலைக் காய்ச்சியே
பால் சோறு அருந்தினாய்...

பசி தீர்த்த பாலை நீ வகையரிந்து
உணவில் கலக்கவே நீயும் நுகர துவங்கினாய்.....

புளித்த உன் விரல் பட்டதும்
பால் மறுநாள் தயிரானதும்
உன் கண்டுபிடிப்பே....

பால் சோறு உண்ட நீ
தயிரின் வருகையால் தயிர்  சோறுக்கு
மாறினாய்.....

பால் தந்த பசுவையும் 
ஏர் பூட்டிய மாட்டையும் தெய்வமாக மாற்றினாய்.....

பால் வணிகம் செய்யவே 
பாலுடன் நீரை கூட்டினாய்....
பால் கூடுதல் ஆனதால்
பாங்காய் வியாபாரம்; பெருக்கினாய்.....

பாலை நீயும் கூட்டவே
பாலுடன் நீரை கலந்த நீ
தயிர் வணிகம் பெருக்கவே
தயிருடன் நீரை கூட்டீனாய்.....
அச்சச்சோ....
தயிர்  மோரும் ஆனதே......

மோரை மோர்ந்த மனிதனே
மோரை பருக துவங்கினாய்....

பால் சோறு கண்ட நீ
தயிர்  சோறு உண்ட நீ
மோர்  சாதம் உன் புதுப்படைப்பே....

தாகம் தீர்த்த மோரினால் உன் 
பித்தமும் தணிந்து போனதே...
பித்தம் தெளிந்த மோரினால்
உன் சித்தமும் தெளிந்து போனதே...
உன் சித்தம் தெளிந்து போனதால்
மோரை குடிக்க பழகினாய்....

மோரை பருகும் போது நீ
மோரில் மிதக்கும் மிதவையை
மெல்ல சேர்க்க துவங்கினாய்....
சேர்த்து வைத்த மிதவையை 
மெல்ல திண்ண பழகினாய்....

எண்ணெய் வாடை வீசியதால்
மிதவையை வெண்ணை என 
அழைத்திட்டாய்....
வெண்ணை உண்ட வாயினால்
மண்ணளக்க முடியுமே....
மண்ணளக்கும் வித்தையை
வெண்ணை தந்து உதவுமே....

மோரை கடைந்த மனிதனால்
வெண்ணை எடுக்க முடிந்தது....
வெண்ணை உண்ட வாயினால்
மாடு திண்ண முடியுமோ?

வெப்ப கண்ட வெண்ணையும்
முறையாய் உருகிப்போனதே....
நீர்  பிரிந்து போனதால்
வெண்ணை நெய்யும் ஆனதே...

உண்ணும் உணவில் அனைத்திலும்
நெய் சேர்க்க துவங்கினாய்...
நெய் சேர்த்த உணவெல்லாம்
நெய் மணக்க செய்திட்டாய்....

நெய்யை உண்ட மனிதனால்
மாட்டைக் கொல்ல முடியுமோ...
மாட்டைக் கொல்லும் மனிதனே...
உனக்கு நெய்யின் குணம் தெரியுமோ?

நெய்யின் குணம் தெரிந்தவனே
மாட்டை மதிக்க துவங்குகிறான்....

பஞ்சம் வந்த காலத்தில்
பட்டினையை போக்கவே
மாடு திண்ற மனிதர்களே....
உப்பு நெருப்பு இன்றியே...
மாட்டிறைச்சி திண்ணுங்களேன்.....

இறந்து போன பெண்ணை நீ
புணர்ந்து என்ன லாபமோ....
செத்துப்போன மாட்டை நீ
உண்டு என்ன லாபமோ?

ஏ மனிதனே...
பால் தந்த பசுவினை 
பால் மாறாமல் கொல்வது ஏனோ?

தயிரு தந்த தங்கத்தை கேவலம்
எலும்புக்காக கொல்வது ஏனோ?

மோர்  தந்த பசுவினை மோசம் செய்த மனிதனே.... 
மோட்சம் உனக்கு கிடைக்குமோ?

வெண்ணை தந்த பசுவினை வெட்ட
துணிந்த மனிதனே...
வெட்கப்பட வேண்டுமே....
மனிதனென்று சொல்லவே....

நெய் தந்த பசுவினை நெத்தியில்
அடிக்கும் போது என்ன வலி நேருமென்று நீயும் கொஞ்சம் நெனைச்சுப் பாரு........
நன்றி.....
வணக்கம்.....
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!

No comments:

Post a Comment