Friday, October 30, 2015

தமிழ்நாட்டை தமிழர்களால் ஒருபோதும் ஆளமுடியாது!



தமிழ்நாட்டை தமிழர்களால் ஒருபோதும் ஆளமுடியாது! காரணம் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்பதற்க்காக யாம் மேற்படி கூறவில்லை ! தமிழர்களுக்கு இது ஒரு பொல்லாத காலம் என்றே சொல்ல வேண்டும்!

தமிழர்நாடு தமிழர்வசம் இருந்தால் காலம் நம்கையில் என்று பெருமிதம் கொள்ளலாம்..... ஆனால் காலத்தின் சாபமோ என்னவோ தமிழகத்தை ஆள்பவர்கள் தமிழரல்லாத மாற்று மொழி இனத்தவர்களே என்றால் அது மிகையாகாது ! 

மாற்று இனத்தவரின் சூழ்ச்சிகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு தமிழர்களுக்கு அறிவு இல்லை என்றே சொல்ல வேண்டும்! காரணம் அந்த அளவிற்கு ஆதிதமிழர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது? அந்த அளவிற்கு தங்கள் மூளையை பயன்படுத்தும் மாற்று இனத்தவரின் ஒற்றுமை மெய்சிலிர்க்க செய்கிறது! இன்னொன்றும் கூற கடமைப் பட்டுள்ளோம் அதாவது தமிழ்நாட்டை தமிழர்கள் ஆள வேண்டுமென்றால் தமிழர்களுக்கு சில சிறப்பு தகுதிகள் வேண்டும். 

முதல் தகுதி பொய் சொல்ல தெரிந்திருக்கவேண்டும். 
இரண்டாவது தகுதி திருட தெரிந்திருக்கவேண்டும் பின் திருடியவுடன் பதுங்கும் தகுதி! மூன்றாவது தகுதி கொலை கொள்ளை ஊழல் லஞ்சம் லாவண்யங்களை சுவடு தெரியாமல் மறைக்கும் தகுதி!

நான்காவது தகுதி விபச்சாரம் செய்ய தன்னை அர்பணிக்கும் தகுதி. ஐந்தாவது தகுதி கணக்கில் வராத பணத்தை வசூல் செய்வது அல்லது மிரட்டி பிடுங்குவது! இல்லையேல் கள்ள கறுப்பு பணத்தை விபச்சாரத்தின் மூலம் சம்பாதிக்கும் தகுதி! 

இப்படி மேற்கூறிய தகுதிகள் தமிழர்களுக்கு என்றைக்கு கிடைக்கிறதோ! அன்றைக்குத்தான் தமிழர்களால் தமிழ்நாட்டை ஆளமுடியும்!

இந்த உண்மையை அறிவுமங்கிய படித்த பெரிய பதவி வகிக்கும் தமிழர்கள் உணர்வது கடினமே! காலத்திற்கேற்றார்போல் தங்கள் தகவமைப்பை மாற்றிக்கொள்ள முடியாத தமிழர்களின் கனவுகள் ஏக்கங்கள் புலம்பல்கள் எல்லாம் வெறும் கொக்கரிப்பாகவே போய்விட்டது! தமிழர்களின் நிலையோ அந்தோ பரிதாபம்!

மேற்கூறிய தகுதிகள் தமிழர்களுக்கு ஒருங்கே அமையாது என்பதும் காலத்தின் சாபக்கேடு என்பதா? விதி என்பதா? தமிழர்களின் பலகீனம் நன்றிவுணர்ச்சி, இந்த பலவீனமே எதரிக்கு பலம் என்பதை தமிழகத்தை ஆளும் மாற்று இனத்தவர்களுக்கு நன்றாக தெரியும் ஆனால் அறிவுமங்கிய படித்த அடிமை தமிழர்களுக்கு புரியாது! 

என்னடா தமிழர்களுக்கு எதிராக எழுதுகிறோம் என்று வருத்தப்பட வேண்டாம்! ஏன் என்றால் மேற்கூறிய தகுதிகள் தமிழர்களுக்கு கிடையாது அதனால்தான் தமிழ்நாட்டை தமிழர்களால் ஆளமுடியாது என்று தலைப்பை தேர்வு செய்தோம்!

ஒருவேளை படித்த சுயமிழந்த அறிவு மங்கிய தமிழர்களுக்கு தாங்கள் எவ்வளவு பெரிய பதவி வகித்தாலும் தாம் ஒரு சுயம் இழந்த அடிமை என்கிற அறிவு வருமாயின் சாண்றோர்களின் துணையோடு வரலாற்றை அறிந்து அவர்களின் வழி வந்தால் தமிழர்களுக்கு விடிவு காலம் எனலாம் இல்லையேல் இருண்ட காலமே!

யாம் ஏற்கனவே கூறியதுபோல் இது பொல்லாத காலம் பொய் களவு கொலை கொள்ளை விபச்சாரம் மேலோங்கி தர்மத்தை வீழ்த்தும் காலம்! ஆதலால் தமிழர்களே தர்மத்தில் நிலைத்திருங்கள் காலம் மாறும் தர்ம சக்கரம் நமக்கு துணை செய்யும் என்று கூறி விடை பெறுகிறோம்!


நன்றி வணக்கம்! 
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!

















2 comments:

  1. ஐயா! தங்களது ஆதங்கம் மிகவும் சரியானதே! ஆனாலும், தமிழனுக்கு இவையெல்லாம் தெரியாது என்பதை என்னால் ஒப்புக்கொள்ளமுடியவில்லை. உலகத்திலேயே இவைகளில் மிகவும் பாண்டித்தியம் பெற்றவன் தமிழ‌ன் மட்டும்தான்!..
    என்ன ஒன்று... இவையனைத்தையும் சகதமிழனிடம் மட்டும்தான் காட்டுவான்! ஆளை ஆள் கவிழ்ப்பதற்காக எந்தப் பேயுடனும் கூட்டுச் சேர்ந்துகொள்வான். எப்போது இவன், தனக்குள் சாதி மத வேற்றுமைகளைக் களைந்து மனிதன் ஆகிறானோ, அப்போதுதான் தமிழனைத் தமிழனே ஆளமுடியும்.

    ReplyDelete
  2. நடராஜன் சிவம் அவர்களுக்கு நேச வணக்கம்!

    சுவையான கட்டுரை! ஆனால், தமிழர்கள் எல்லாருமே கள்ளங்கபடமறியாத அப்பாவிகள் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. எல்லா இனங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே காணப்படுகிறார்கள்!

    இருந்தாலும் தமிழர்களை இவ்வளவு உயர்த்தி எழுதியிருக்கும் உங்கள் அன்பு போற்றத்தக்கது. உங்கள் ஆற்றாமையின் வெளிப்பாடு உணர வேண்டிய ஒன்று! இதைப் படிக்க என்னை அழைத்தமைக்கு நன்றி!

    ReplyDelete